News November 15, 2024

ஐபிஎல் அணிகளுக்கு குட் நியூஸ்!

image

ஜெட்டாவில் நவ. 24-25 தேதிகளில் நடைபெறும் ஐபிஎல் 2025 ஏலத்தில் இரண்டு செட்களாக மார்க்கீ வீரர்கள் இடம் பெறுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரூ. 2 கோடியை அடிப்படை விலையாக கொண்ட இந்த பட்டியலில் ராகுல், பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், சிராஜ், உட்பட 6-9 வீரர்கள் இடம் பெறவுள்ளனர். இதற்கு முன்பு 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மெகா ஏலத்தில் இதுபோன்று நடைமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 16, 2025

மகனை திருமணம் செய்த அம்மா.. வெளிநாட்டு விநோதம்!

image

வாழ்க்கையில் தர்ம சங்கடமான சூழலை சந்தித்தேன் என சிலர் சொல்லுவார்கள். இதை படித்தால் இதைவிட தர்மசங்கடமான சூழல் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும். வெளிநாட்டில் ஏழ்மை காரணமாக தத்து கொடுத்த மகனை அடையாளம் தெரியாமல் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததோடு 2 குழந்தைகளை பெற்றுள்ளார் தற்போது DNA சோதனையில், அந்த இளைஞர் தனது மகன் என்பதை அறிந்த அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். So Sad..!

News August 16, 2025

அஸ்வின் பேச்சுக்கு CSK பதிலடி

image

2025 IPL சீசனில் டெவால்ட் ப்ரேவிஸை விதிகளின் படி, ₹2.2 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்ததாக CSK விளக்கம் அளித்துள்ளது. கடந்த IPL தொடரின் போது குர்ஜப்னீத் சிங் காயமடைந்தார். அவருக்கு மாற்று வீரராக ப்ரேவிஸை, CSK கூடுதல் தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்ததாக அஸ்வின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு வீரர் காயம்பட்டால், அவருக்கு கொடுக்கப்பட்ட தொகையையே மாற்று வீரருக்கும் கொடுக்க வேண்டும் என்பது IPL விதி.

News August 16, 2025

பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர்? PIB FACTCHECK

image

அனைத்து பெண்களுக்கும் இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், அதற்கு உடனே விண்ணப்பிக்கலாம் எனவும் ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் உலா வருகிறது. அது உண்மையல்ல என்று மத்திய அரசின் PIBFactCheck மறுத்துள்ளது. ‘இலவச ஸ்கூட்டி திட்டம்’ என்று எந்த திட்டமும் இல்லை. அரசு உறுதிப்படுத்தாத எந்த தகவலையும் நம்பாதீர், யாருக்கும் ஷேர் செய்யவும் வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!