News March 20, 2025

மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்: பறந்த அதிரடி ஆர்டர்

image

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர், 200 ரூபாய் மதுபானத்துக்கு கூடுதலாக ₹40 வசூலித்த வீடியோ அண்மையில் வைரலானது. இந்நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட டாஸ்மாக் நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஊழியர் மகேஸ்வரனை தற்காலிக பணிநீக்கம் செய்ததோடு, இனி இதுபோல முறைகேட்டில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

Similar News

News September 17, 2025

19 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

image

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

இன்று காலை 8 மணிக்கு ரெடியா இருங்க!

image

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர், இன்று காலை 8 மணிக்கு தயாராக இருக்க வேண்டும். ஏனெனில், தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் இருந்து மதுரை, செங்கோட்டை, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கு வரும் அக்., 29 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

News September 17, 2025

தன்மானம் பேசிவிட்டு டெல்லி ஏன் செல்ல வேண்டும்? TTV

image

தன்மானம் தான் EPS-க்கு முக்கியம் என்றால், டெல்லி செல்ல வேண்டிய அவசியம் என்ன என TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவால் EPS-ன் ஆட்சி காப்பாற்றப்படவில்லை எனவும், கூவத்தூரில் அதிமுக MLA-க்கள் வாக்களித்ததால் தான் அவர் CM ஆனார் என்றும் TTV விமர்சித்துள்ளார். மேலும், தன்னை CM வேட்பாளர் என்றால் யாரும் ஓட்டு போடமாட்டார்கள் என்று கூவத்தூரில் கூறியவர்தான் EPS என்றும் சாடியுள்ளார்.

error: Content is protected !!