News February 17, 2025
தங்கம் சவரனுக்கு ₹400 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் இன்று (பிப்.17) உயர்ந்துள்ளது. கிராமுக்கு ₹50 உயர்ந்து ஒருகிராம் ₹7,940க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ஒரு சவரன் ₹63,520க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹108க்கும், ஒரு கிலோ ₹1,08,000க்கும் விற்கப்படுகிறது. கடந்த 1 வாரத்தில் சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஏறக்குறைய அதற்கு ஈடாக விலை அதிகரித்துள்ளது.
Similar News
News October 17, 2025
ATM யூஸ் செய்வதற்கு முன் இதை கவனிங்க!

*ATM மையத்தில் சந்தேகத்திற்குரிய பொருள்கள் இருப்பின், உடனடியாக வங்கி (அ) போலீஸை அணுகவும்.
*ATM செயல்பாட்டுக்கான SMS, Gmail-ஐ கண்காணியுங்கள்.
*ATM கார்டு தொலைந்தால் (அ) திருடப்பட்டால் உடனடியாக வாடிக்கையாளர் சேவையை அணுகி ‘Block’ செய்யுங்கள்.
*6 மாதத்திற்கு ஒருமுறை PIN-ஐ மாற்றுங்கள். *1234, பிறந்த தேதி போன்ற எளிதான PIN-களை தவிருங்கள். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 17, 2025
BREAKING: CP ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணனின் போயஸ் கார்டன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்ததில், வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலத்தில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த், சசிகலா ஆகியோரது வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 17, 2025
கைது செய்யப்பட்ட 2-வது நாளே சிறையில் மர்ம மரணம்!

திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் உயிரிழந்தார். இவர், கடந்த 2012-ல் மதுரை திமுக பிரமுகர் கதிரவனை கடத்தி பணம் பறித்த வழக்கில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 2-வது நாளே உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள், ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் சிறைச்சாலை பகுதியில் பதற்றமாக சூழல் நிலவுகிறது.