News March 21, 2025
தங்கம் தென்னரசு பேச்சால் அவையில் அமளி!

அதிமுகவை பாஜக கைப்பற்ற துடிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க அனுமதிக்க வேண்டும் என சபாநாயகரிடம் அதிமுகவினர் முறையிட்டனர். அதற்கு வேளாண் பட்ஜெட் மீதான பதிலுரைக்கு பின் பேசலாம் என சபாநாயகர் தெரிவித்தார். அதிருப்தியடைந்த அதிமுகவினர் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தியதால் அவையில் அமளி ஏற்பட்டது.
Similar News
News March 28, 2025
மார்ச் 28: வரலாற்றில் இன்று

193 – உரோமப் பேரரசர் பெர்ட்டினாக்ஸ் பிரடோரியன் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
1970 – துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,086 பேர் உயிரிழந்தனர்.
1910 – கடல் விமானத்தில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி பெற்றார்.
2005 – இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
News March 28, 2025
வீக் எண்ட் மது குடிப்பவரா நீங்கள்?

வார இறுதியில் மது குடிப்பது என்பது இன்று பலரது பொழுதுபோக்காக மாறிவிட்டது. இப்படி, வார இறுதியில் குடிக்கும் பழக்கமும் பல தீமைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது வார நாட்களில் குடிக்கும் பழக்கம் இல்லாததால், வார இறுதியில் குடிப்பது சராசரியானது என்ற நினைப்பில் அதிகளவு மதுவை நுகர்கிறார்களாம். இதனால், மன உளைச்சல், அலுவலக பொறுப்பை நிர்வகிப்பதில் சிரமம் என பல பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.
News March 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 219
▶குறள்:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
▶பொருள்: ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.