News April 11, 2025
3 நாள்களில் ₹4,160 உயர்ந்த தங்கம்

தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 8-ம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,225-க்கும், சவரன் ₹65,800-க்கும் விற்பனையான நிலையில், இன்று காலை நேர வர்த்தகப்படி ஒரு கிராம் ₹8,745-க்கும், சவரன் ₹69,960-க்கும் விற்பனையாகிறது. 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,160 அதிகரித்துள்ளது. இது வரும் நாள்களில் மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 27, 2025
EPS எங்களை பாராட்டவா செய்வார்? துரைமுருகன்

CM ஸ்டாலின் ஒரு சினிமா விமர்சகராக மாறிவிட்டார் என்று EPS கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் என்றால் அப்படித்தான் பேசுவார், பிறகு எங்களை பாராட்டவா செய்வார் என்று தெரிவித்தார். மேலும், CM உத்தரவின் பேரில் நெற்பயிர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News October 27, 2025
ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ரஹானே

ரஞ்சி டிராபியில் இன்று ரஹானே 159 ரன்களை விளாசினார். இதையடுத்து அவர் பேசும்போது, தன்னை போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆஸி.,க்கு எதிரான BGT தொடரின் போது அணிக்கு நான் தேவைப்பட்டேன். ஆனால், BCCI தன்னிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. வயது என்பது வெறும் எண் தான் என்பதை ரோஹித்தும், கோலியும் நிரூபித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 501 ▶குறள்: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.▶பொருள்: அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.


