News March 29, 2025
4 நாள்களில் ₹1,400 உயர்ந்த தங்கம்

தங்கம் விலை கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,400 உயர்ந்துள்ளது. இது, தங்கத்தில் முதலீடு செய்தவர்களை மகிழ்ச்சியடைய செய்திருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் கடந்த 1ஆம் தேதி ₹63,520க்கு விற்பனையான ஒரு சவரன், ₹3,360 அதிகரித்து இன்று (மார்ச் 29) வரலாறு காணாத உச்சமாக ₹66,880ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 2, 2025
ஒரே மேடையில் 234 தொகுதி வேட்பாளர்கள்: சீமான்

சட்டமன்றத் தேர்தலையொட்டி, வரும் பிப்ரவரி 21-ம் தேதி நாதக சார்பில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ திருச்சியில் நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார். கூட்டணி வைக்காமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாதக தனித்து களம் காண்கிறது. இந்த மாநாட்டில் நாதக சார்பில் போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News December 2, 2025
கம்பேக் கொடுக்கும் ஹர்திக் பாண்ட்யா!

ஆசிய கோப்பையில் காயம் அடைந்த ஹர்திக், கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். BCCI-ன் சிறப்பு மையத்தில்(COE) சிகிச்சை எடுத்து கொண்ட அவர், T20-ல் விளையாட முழு உடற்தகுதி பெற்றுள்ளாராம். எனவே, பரோடா அணிக்காக சையது முஷ்டாக் தொடரில் விளையாடவுள்ளார். இதனை தொடர்ந்து, வரும் 9-ம் தேதி தொடங்கும் SA-வுக்கு எதிரான T20 தொடரிலும் ஹர்திக் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 2, 2025
பிரபல நடிகர் காலமானார்.. மனைவி உருக்கம்

நடிகர் தர்மேந்திராவின் இறுதிச்சடங்கை அவசரமாக முடித்ததற்கான காரணத்தை ஹேமமாலினி விளக்கியுள்ளார். நோய்வாய்ப்பட்ட நிலையில் தன்னை யாரும் பார்க்க கூடாது என்று எப்போதுமே தர்மேந்திரா எண்ணியதாகவும், தனது கஷ்டங்களை நெருக்கமானவர்களிடம் இருந்து கூட அவர் மறைத்தார் எனவும் ஹேமமாலினி உருக்கமாக தெரிவித்துள்ளார். ஒருவரின் மறைவுக்கு பிறகு நடப்பவை அனைத்தும் குடும்பத்தினர் எடுக்கும் முடிவுகள் என்றும் கூறியுள்ளார்.


