News May 15, 2024
தங்கம் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹53,800க்கும், கிராமுக்கு ₹35 உயர்ந்து ₹6,725க்கும் விற்பனையாகிறது. நேற்று கிராமுக்கு ₹35ம், சவரனுக்கு ₹280ம் குறைந்தது. அதேசமயம், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ₹91க்கும், கிலோ வெள்ளி ₹91,000க்கும் விற்பனையாகிறது.
Similar News
News March 24, 2026
மூத்த தலைவர் தத்தா மேகே காலமானார்

காங்கிரஸ், பாஜகவில் முக்கியத் தலைவராக விளங்கிய தத்தா மேகே(89) காலமானார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவர், காங்கிரஸ் சார்பில் நாக்பூரில் போட்டியிட்டு 4 முறை லோக் சபா MP ஆகியுள்ளார். மேலும், 1999-ல் தேசியவாத காங்கிரஸ் அங்கு ஆட்சியமைத்தபோது, இவர் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 2014-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த தத்தாவின் மறைவுக்கு நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News March 24, 2026
மூத்த தலைவர் தத்தா மேகே காலமானார்

காங்கிரஸ், பாஜகவில் முக்கியத் தலைவராக விளங்கிய தத்தா மேகே(89) காலமானார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவர், காங்கிரஸ் சார்பில் நாக்பூரில் போட்டியிட்டு 4 முறை லோக் சபா MP ஆகியுள்ளார். மேலும், 1999-ல் தேசியவாத காங்கிரஸ் அங்கு ஆட்சியமைத்தபோது, இவர் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 2014-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த தத்தாவின் மறைவுக்கு நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News March 24, 2026
சாத்தான்குளம்.. EPS மன்னிப்பு கேட்க வேண்டும்: ரகுபதி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து 2020-ல் நடந்த பெரிய வன்முறை சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவம் என ரகுபதி தெரிவித்துள்ளார். போலீஸாரால் கொல்லப்பட்டவர்களை உடல்நலக்குறைவு என அன்றைய CM பொய் சொல்லி போலீசாரை காப்பாற்றினார்; <<19457182>>இன்றைய தீர்ப்பை அடுத்து<<>> பொய் சொன்ன EPS-ம் ஒருவகையில் குற்றவாளிதான். எனவே அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


