News February 18, 2025
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.18) ரூ.240 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,970க்கும், சவரன் ரூ.63,760க்கும் விற்பனையாகிறது. அதேவேளையில் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும், பார் வெள்ளி கிலோ ரூ.1,08,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்வது குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
Similar News
News October 29, 2025
சற்றுமுன்: வெள்ளி விலை மீண்டும் ₹1,000 உயர்ந்தது

கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று(அக்.29) மீண்டும் ₹1,000 உயர்ந்துள்ளது. 1 கிராம் ₹166-க்கும், பார் வெள்ளி ₹1,66,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் சரிந்து வந்த வெள்ளியின் விலை மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளதே, இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். வெள்ளி விலை உயர்வால் அதில், முதலீடு செய்தவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். உங்கள் கருத்து?
News October 29, 2025
Gmail யூஸர்களே.. இத உடனே மாத்துங்க!

183 மில்லியனுக்கும் அதிகமான G-mail, Yahoo, Outlook அக்கவுண்ட்களின் பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது. இதனை ஆஸ்திரேலியாவை சேர்ந்த CyberSecurity வல்லுநர் ட்ராய் ஹன்ட் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயனர்கள் தங்களின் G-mail, Yahoo, Outlook அக்கவுண்ட்களின் பாஸ்வேர்டை மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் உடனே பகிருங்கள்.
News October 29, 2025
BREAKING: அமைச்சர் நேரு கைதாகிறாரா?

நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கப்பட்டுள்ளதாக ED கூறியுள்ளது. அமைச்சர் நேரு, அவரது சகோதரர் வீடுகளில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ED கடிதம் எழுதியுள்ளது. போக்குவரத்து துறையில் வேலைக்காக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி சிறை சென்றார். அதே பாணியில் நேரு கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


