News March 28, 2025
3 நாள்களில் சவரனுக்கு ₹1,240 உயர்ந்த தங்கம்

சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி 22 கேரட் ஒரு சவரன் ₹65,480க்கு விற்பனையானது. பின்னர், 26ஆம் தேதி சவரனுக்கு 80 ரூபாயும், நேற்று 320 ரூபாயும் அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடனே சவரனுக்கு ₹840 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,240 உயர்ந்து ₹66,720க்கு விற்பனையாகிறது.
Similar News
News April 7, 2026
மாவு பாக்கெட் வாங்கறீங்களா? எச்சரிக்கை!

டிபன் செய்ய மிடில்கிளாஸ் மக்களுக்கு ஈஸி ஆப்ஷன், கடையில் விற்கப்படும் தோசை மாவுதான். ஆனால், அது உடல்நலத்தை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அது தரக்குறைவாக இருந்தால் *புட்பாய்சன் -வயிற்றுப்போக்கு, குடல் பிரச்னை *ஜீரண பாதிப்பு *ரத்த சர்க்கரை அதிகரிப்பு *BP அதிகரிப்பு *சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்கு ஒரே தீர்வு சிரமம் பார்க்காமல் வீட்டிலேயே மாவரைத்து பயன்படுத்துவதுதான்.
News April 7, 2026
நடிகை சுபாஷினி மரணம்.. தொடரும் சோகம்

தமிழ் சீரியல் நடிகைகளின் தற்கொலைகள் அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை ராஜேஸ்வரி, குடும்ப பிரச்னையால் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு விபரீத முடிவை எடுத்தார். ‘துர்கா’ சீரியல் நடிகை நந்தினியும் தாயுடன் ஏற்பட்ட பிரச்னையால் உயிரை மாய்த்துக் கொண்டார். அவ்வரிசையில் ‘கயல்’ சீரியல் நடிகை<<19582386>> சுபாஷினியும்<<>> தவறான முடிவை எடுத்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
News April 7, 2026
காரைக்குடி தொகுதியில் சீமானுக்கு புது சிக்கல்!

2021 தேர்தலில் நாதகவுக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் லோக்சபா தேர்தலில் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள நாதகவுக்கு கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் சீமான் போட்டியிடும் காரைக்குடியில், இந்திய குடியரசு கட்சியின் கருப்பையாவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது வாக்களர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கலாம்.


