News April 29, 2025
ஏப்ரலில் சவரனுக்கு ₹3,760 உயர்ந்த தங்கம்!

தங்கம் விலை இம்மாதம் கடும் உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 1-ம் தேதி 22 கேரட் 1 கிராம் ₹8,510-க்கும், சவரன் ₹68,080-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் (28 நாள்களில்) கிடுகிடுவென உயர்ந்து இன்று (ஏப்.29) ஒரு சவரன் ₹71,840-ஆக விற்பனையாகிறது. அதாவது இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹3,760 உயர்ந்துள்ளது. நாளை(ஏப்.30) அட்சய திருதியை என்பதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 11, 2025
விஜய் கட்சியில் இருந்து விலகினார்

தவெகவின் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் அஜய், சீமான் முன்னிலையில் நாதகவில் இணைந்தார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் நாதகவில் இணைந்துள்ளனர். மேலும், தவெகவில் உழைக்கும் நிர்வாகிகளுக்கு மதிப்பில்லை, ஒருங்கிணைப்பு இல்லை எனவும் அஜய் குற்றம்சாட்டியுள்ளார். <<18239770>>பல மாவட்டங்களில்<<>> பொறுப்புக்கு பணம் வாங்கப்படுவதாக தவெக மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது.
News November 11, 2025
அவரை கேட்டுதான் படங்களுக்கு OK சொல்கிறாரா துருவ்?

‘பைசன்’ வெற்றிக்குப் பிறகு துருவ் விக்ரம் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. தனது அடுத்த படக்கதையையும், இயக்குநரையும் மாரி செல்வராஜே முடிவு செய்யட்டும் என்று தனக்கு வரும் கதைகள் அனைத்தையும் அவருக்கே ரீடைரக்ட் செய்கிறாராம். இதை சில இயக்குநர்கள் விரும்பவில்லையாம். இன்னொரு பக்கம், கதை சொல்ல வருபவர்களிடம் தனது சம்பளத்தையும் உயர்த்தி கேட்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News November 11, 2025
குண்டு வெடித்த இடத்தில் கிடைத்த முதல் தடயம்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல் தடயமாக சம்பவ இடத்தில் புல்லட் ஒன்று சிக்கியுள்ளது. இதை வைத்து, இந்த புல்லட் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எது, அதனுடைய உரிமையாளர் யார், துப்பாக்கி சூடு ஏதும் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கார் உரிமையாளரிடம் விசாரணை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.


