News April 15, 2025
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கம்.. பரபரப்பு தகவல்

BSP மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து <<16103800>>பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்<<>> நீக்கத்திற்கு மாநிலத் தலைவர் ஆனந்தன் தான் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் நடந்த செயற்குழு கூட்டத்தில், பொற்கொடி தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆனந்தன் மீது பல புகார்களை கூறினர். குறிப்பாக ஆனந்தன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிடப் பிரதிநிதிகளிடம் பொற்கொடி கூறியிருந்த நிலையில், இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
Similar News
News December 1, 2025
RO-KO ஜோடியை நினைத்து கவலை வேண்டாம்: பதான்

RO-KO ஜோடியின் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் கவலைப்படுவதை நிறுத்த வேண்டும் என இர்ஃபான் பதான் அறிவுறுத்தியுள்ளார். இந்த 2 லெஜெண்ட்களும் தங்களது கடைசி கட்ட கிரிக்கெட் கரியரை சுதந்திரமாக விளையாடட்டும், ரசிகர்களாகிய நாம் அதை ரசிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ODI WC-க்கு இருவரும் தகுதி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
போன்களில் வரும் மாற்றம்.. இனி தொலைந்தாலும் NO Worry!

இந்தியாவில் ஒவ்வொரு புதிய போன்களிலும், ‘Sanchar Saathi’ எனும் டெலிட் செய்ய முடியாத சைபர் செக்யூரிட்டி செயலியை, 90 நாள்களுக்குள் Inbuild செய்ய சொல்லி, ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள போன்களில், சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் இதை சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த அரசு செயலியின் உதவியால், இதுவரை காணாமல் போன 7 லட்சம் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
News December 1, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

மாதத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, US டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால், ரூபாயின் மதிப்பு 34 பைசாக்கள் சரிந்து ₹89.79 ஆக உள்ளது. அதேபோல், மும்பை பங்குச்சந்தை 65 புள்ளிகள் சரிந்து 85,642 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை 27 புள்ளிகள் சரிந்து 26,175 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.


