News April 15, 2025
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கம்.. பரபரப்பு தகவல்

BSP மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து <<16103800>>பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்<<>> நீக்கத்திற்கு மாநிலத் தலைவர் ஆனந்தன் தான் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் நடந்த செயற்குழு கூட்டத்தில், பொற்கொடி தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆனந்தன் மீது பல புகார்களை கூறினர். குறிப்பாக ஆனந்தன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிடப் பிரதிநிதிகளிடம் பொற்கொடி கூறியிருந்த நிலையில், இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
Similar News
News November 9, 2025
திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது: EPS

TN-ல் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை என EPS குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 54 மாத DMK ஆட்சியில் போலீஸ் தனது கம்பீரத்தை இழந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். திமுகவின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை TN மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருவதாகவும், தணலில் இட்ட புழுவாக மக்கள் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் சாடியுள்ளார்.
News November 9, 2025
சிசேரியன் காயம் வேகமாக ஆற TIPS!

கர்ப்ப காலத்தில் எப்படி உடல்நலத்தை பேணி காத்தீர்களோ அதைவிட கவனமாக குழந்தை பிறந்த பின் பார்த்துக்கொள்ள வேண்டும் ➤ஆரஞ்சு, நெல்லி, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் ➤பருப்பு, மீன், சிக்கன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள் ➤சருமம் பழையபடி மாற தேவையான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம் ➤தினம் ஒரு கீரை, நட்ஸ் வகைகளை எடுத்துக்கொண்டால் சிறப்பு. தாய்மார்களுக்கு SHARE THIS.
News November 9, 2025
டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாறுகிறது

பருவமழை முடியும் வரை டாஸ்மாக் கடைகளை 1 மணி நேரம் முன்னதாக மூட அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, மதியம் 12 – இரவு 10 மணி வரை கடைகள் திறக்கப்படுகின்றன. மழை நேரத்தில் வீடுகளுக்கு செல்ல சிரமம் ஏற்படுவதால் கடை மூடும் நேரத்தை குறைக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையின் சூழலுக்கேற்ப கடைகளை சீக்கிரம் மூட சில மாவட்ட நிர்வாகங்களும் அறிவுறுத்தியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.


