News April 19, 2025

தங்க குண்டு மணி, பழங்கால பானை கண்டெடுப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தங்க குண்டு மணி, பழங்கால பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் அகழாய்வில் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அந்த வகையில் ஆபரணங்களிலும் தமிழர்கள் அதிக கவனம் செலுத்தியதற்கான சான்று கொடும்பாளூரில் நடந்த அகழாய்வில் கிடைத்துள்ளது. அதனுடன் அழகிய மண்பானையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 16, 2025

நாளை 7 மாவட்டங்களில் விடுமுறையா? வந்தது Alert

image

அடுத்த 5 நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அலர்ட் விடுத்துள்ளது. குறிப்பாக, நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்று இரவு அல்லது நாளை காலை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News November 16, 2025

மூன்று திசைகளில் பார்வையை பதித்த விஜய்

image

SIR-க்கு எதிராக தவெக சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் 2-ம் கட்ட தலைவர்களை களமிறக்கியுள்ளார் விஜய். தலைநகர் சென்னையில் புஸ்ஸி ஆனந்த், கொங்கு மண்டலமான கோவையில் அருண்ராஜ், தென்மண்டலமான மதுரையில் நிர்மல்குமார் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 2-ம் கட்ட தலைவர்கள் அனைத்து பகுதிகளையும் கவர் செய்யவும், கட்சியினருக்கு நம்பிக்கை அளிக்கவும் விஜய் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

News November 16, 2025

பிரபல நடிகை மரணம்.. நடிகர் கண்ணீருடன் இரங்கல்

image

மறைந்த பழம்பெரும் நடிகை <<18284857>>காமினி<<>> குறித்து நடிகர் சாகித் கபூர் எமோஷனலாக பேசியுள்ளார். கபீர் சிங் படத்தில் காமினியுடன் நடித்த அனுபவங்களை நினைவுக்கூர்ந்த சாகித், அவருடன் பணிபுரிந்தது ஒரு பாக்கியம் என கூறியிருக்கிறார். மேலும் காமினி ஒரு அற்புதமான கலைஞராக எப்போதும் நினைவுகூரப்படுவார் எனவும், அவர் மிகவும் கனிவானவர் மற்றும் அன்பானவர் என்றும் சாகித் கபூர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!