News April 19, 2025

தங்க குண்டு மணி, பழங்கால பானை கண்டெடுப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தங்க குண்டு மணி, பழங்கால பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் அகழாய்வில் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அந்த வகையில் ஆபரணங்களிலும் தமிழர்கள் அதிக கவனம் செலுத்தியதற்கான சான்று கொடும்பாளூரில் நடந்த அகழாய்வில் கிடைத்துள்ளது. அதனுடன் அழகிய மண்பானையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 3, 2025

ATM கார்டில் உள்ள இந்த 16 எண்கள் அர்த்தம் தெரியுமா?

image

✦ATM கார்டில் உள்ள முதல் எண், அதை வழங்கும் தொழில்துறையுடன் தொடர்பு கொண்டது. அதாவது, பேங்கிங், பெட்ரோலியம், ஏர்லைன் இவற்றில் எது என்பதை குறிக்கும் ✦அடுத்த 5 எண்கள், கம்பெனியை குறிக்கிறது. VISA, Mastercard, Maestro போன்றவை ✦7-15 வரையான நம்பர்கள், பேங்க் அக்கவுண்ட்டுடன் தொடர்புடையது. ஆனால், அக்கவுண்ட் நம்பரும் இதுவும் ஒன்றாக இருக்காது ✦கடைசி நம்பர் Luhn algorithm முறையில் கம்ப்யூட்டரில் உருவாவது.

News December 3, 2025

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை

image

கனமழை எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் புதுச்சேரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2025

BREAKING: விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

image

கனமழை எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, புதுச்சேரிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, குமரி, தி.மலை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!