News April 30, 2025
அட்சய திருதியை நாளில் வணங்க வேண்டிய கடவுள்கள்!

அட்சய திருதியை குறைவில்லாத பெருக்கத்திற்கான நாளாகும். இந்நாளில் கடவுளை வணங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். விஷ்ணுவை வணங்குவது செல்வம், மகிழ்ச்சியை கொடுக்கும். லட்சுமியை வணங்குவது பணம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். விநாயகரை வணங்குவது தடைகளை நீக்கும். குபேரனை வணங்குவது செல்வத்தை கொடுக்கும். சிவனை வணங்குவது மன அமைதியை கொடுக்கும். SHARE IT.
Similar News
News December 1, 2025
BREAKING: திமுக முன்னாள் MP வீட்டில் கொள்ளை

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சை வீட்டில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்ற நிலையில், கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜயன், 1999 முதல் தொடர்ந்து 3 முறை நாகை MP ஆக இருந்தவர்.
News December 1, 2025
நடிகை சமந்தாவுக்கு திருமணம் முடிந்தது❤️ PHOTO

நடிகை சமந்தாவும், இயக்குநர் ராஜ் நிடிமொருவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது இருவருக்கும் இரண்டாவது திருமணமாகும். Family man வெப் தொடரின் சூட்டிங்கில் அறிமுகமாகி, காதலித்து இன்று இருவரும் தம்பதிகளாக மாறியுள்ளனர். ராஜ் இயக்கிய ‘சிட்டாடல் ஹனி பன்னி’ வெப் தொடரிலும் சமந்தா நடித்திருந்தார். வாழ்த்துகள் சமந்தா!
News December 1, 2025
செயலில் காட்டுங்க PM மோடி: செல்வப்பெருந்தகை

தமிழுக்கான உண்மையான மரியாதையை நிதி ஒதுக்கீடு, வளர்ச்சி திட்டங்கள் மூலம் PM மோடி காட்டவேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மத்திய அரசு சமஸ்கிருதத்துக்காக ₹2532 கோடி செலவிட்டதாகவும், ஆனால் தமிழ் உள்பட 5 மொழிகளுக்கு ₹147.56 கோடி மட்டுமே செலவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், PM தமிழை உயர்த்தி பேசியதில் பெருமை தான் என்ற அவர், ஆனால் செயலில் TN-ஐ புறக்கணிப்பதாக விமர்சித்துள்ளார்.


