News May 1, 2024
இரண்டாக பிரிகிறது கோத்ரெஜ் குழுமம்

127 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கோத்ரெஜ் குழுமம், 2ஆக பிரியவுள்ளது. கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை ஆதி கோத்ரெஜ் மற்றும் அவரது சகோதரர் நாதிர் ஆகியோரும், கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தை ஜம்ஷித் கோத்ரெஜ், ஸ்மிதா ஆகியோரும் நிர்வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல வருட பங்கு உரிமைப் பிரச்னை சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. செபி ஒப்புதல் கிடைத்ததும் இதற்கான மற்ற பணிகள் தொடங்கும்.
Similar News
News August 26, 2025
கேப்டன்சி வாய்ப்பை நழுவ விட்ட ஸ்ரேயாஸ் ஐயர்

ஆசிய கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், துலீப் டிராபியில் மேற்கு மண்டல அணியின் பேப்டன்சி வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் நிராகரித்தாக கூறப்படுகிறது. ஸ்ரேயாஸ் வாய்ப்பை ஏற்காததால் அந்த வாய்ப்பு ஷர்துல் தாக்கூருக்கு சென்றது. ஆசிய கோப்பை கனவு தகர்ந்ததால் இப்போது சாதரண வீரராக துலீப் டிராபியில் அவர் விளையாட உள்ளார். போராட்ட குணம் கொண்ட ஸ்ரேயாஸ் மீண்டும் டி20 அணியில் நிச்சயம் இணைவார் என நம்பலாம்.
News August 26, 2025
சனாதன தர்மத்தை அழிக்க முடியாது: வானதி சீனிவாசன்

சனாதன தர்மத்தை எந்த அரசியல் தலைவர்களும் அழிக்க முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ராமர் குறித்து வன்னி அரசு பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் முதலில் உண்மையான ராமாயணத்தை படிக்க வேண்டும் எனவும் வானதி பதிலடி கொடுத்துள்ளார். கட்டுக்கதைகளை வைத்து பேசுவது சரியானதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
News August 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 439 ▶குறள்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
▶ பொருள்: எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.