News October 25, 2024

வேப்பூரில் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

image

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தையில் விடிய விடிய ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மாலை 4 மணிக்கு துவங்கிய ஆட்டுச் சந்தை இன்று காலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த சந்தையில் வெள்ளாடு, குறும்பாடு, கொடியாடு, மாலாடு என பல்வேறு வகையான ஆடுகள் ரூ. 5ஆயிரம் முதல் ரூ. 37 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

Similar News

News November 3, 2025

கடலூர்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

image

கடலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு தனியாக வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் தற்போது 8 மாத கர்ப்பமாக சிறுமி இருந்து வருகிறார். இதுகுறித்து அறிந்த மகளிர் காவல் துறையினர், நேற்று வாலிபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 3, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (நல.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, ஆகிய உட்கோட்டங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

கடலூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

image

கடலூர் மக்களே, விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்து Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!