News March 17, 2025
ஆடு, கோழி, சேவல் விலை உயர்ந்தது

தென் மாவட்டங்களில் அம்மன் கோயில்களில் பங்குனித் திருவிழா தொடங்க உள்ளதால், கோழி, சேவல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தென்மாவட்ட வியாபாரிகள், கிராம மக்கள் ஆடு, கோழி, சேவலை வாங்க தொடங்கியுள்ளனர். இதனால், 1kg எடைகொண்ட சேவல் ₹350க்கு விற்ற நிலையில், தற்போது ₹450 – ₹500 வரையும், 1kg எடைகொண்ட நாட்டுக்கோழி விலை ₹450 இல் இருந்து ₹1500 வரையும் விற்பனையாகிறது. ஆடு (ஒன்றுக்கு) ₹3000 வரை உயர்ந்துள்ளது.
Similar News
News September 23, 2025
தேசிய சினிமா விருதுகளுக்கு ரொக்க பரிசு எவ்வளவு?

71-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதானது தங்க தாமரை (அ) வெள்ளி தாமரை பதக்கங்கள், ரொக்கப் பரிசு ஆகிய வடிவில் வழங்கப்படும். தங்க தாமரை பதக்கம் பெறுபவருக்கு ₹3 லட்சம், வெள்ளி தாமரை பதக்கம் பெறுவோருக்கு ₹2 லட்சமும் ரொக்கம் வழங்கப்படும். ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு தங்க தாமரை பதக்கம், பொன்னாடையுடன் ₹10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
News September 23, 2025
ஷேவிங் செய்யும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க

➤ரேசரை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது ➤ஒரே ரேசரை மாதக்கணக்கில் பயன்படுத்துவது ➤மேல் நோக்கி ஷேவ் செய்வது ➤சோப்பை போட்டு ஷேவ் செய்வது ➤அதிக அழுத்தம் கொடுத்து ஷேவ் செய்வது ➤ஷேவ் செய்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது. இதுபோன்ற தவறுகளை செய்தால் காயம், எரிச்சல், அரிப்பு, வறட்சியில் இருந்து தொடங்கி, நோய்த்தோற்று ஏற்படலாம். இதில் நீங்க எந்த தப்ப பண்றீங்க?
News September 23, 2025
எத்தனை பேர் வரி செலுத்துகிறார்கள் தெரியுமா?

நாட்டு மக்கள் தொகை 142.21 கோடியாக இருக்கும் நிலையில், அவர்களில் வெறும் 4%, அதாவது 3.51 கோடி பேர் தான் கடந்த நிதியாண்டில் வருமான வரி செலுத்தியதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 51.69 கோடி பேர் பான், ஆதார் கார்டுகளை இணைத்துள்ளதாகவும், அவர்களில் 7.20 கோடி பேர் ITR தாக்கல் செய்துள்ளதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 50% பேர் வருமான செலுத்துவதாகவும் அவர்கள் ஒப்பிடுகின்றனர்.