News December 26, 2024
ஞானசேகரன் DMK உறுப்பினர் இல்லை: அமைச்சர் விளக்கம்

அண்ணா பல்கலை. வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக உறுப்பினர் என அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதை மறுத்துள்ள அமைச்சர் கோவி. செழியன், “பாலியல் வழக்கில் கைதானவர் திமுக நிர்வாகி என்பது பொய். அண்ணாமலை கூறியது தவறான தகவல்; எது நடந்தாலும் திமுகவை குறை சொல்வது தான் அவரின் பிறவி குணம்” என்று விமர்சித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
மசூத் அசாரை ஒப்படைக்க தயார்: பாக்., Ex அமைச்சர்

ஹபீஸ் சயீத், மசூத் அசார் ஆகியோரை நாடு கடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாக்., முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். விரிவான பேச்சுவார்த்தை நடத்தினால் நிச்சயம் இதெல்லாம் நடக்கும் என்றும், ஆனால் இதற்காக சரியான ஆதாரங்களை சமர்ப்பிப்பதும், எல்லை தாண்டி தீவிரவாதத்தில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்க சாட்சியம் அளிக்க இந்தியாவில் இருந்து நபர்கள் வருவதும் முக்கியம் எனவும் கூறியுள்ளார்.
News July 8, 2025
யஷ் தயாள் மீது பரபரப்பு FIR!

RCB வீரர் யஷ் தயாள் மீது உ.பி.யில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. காஜியாபாத்தை சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது இந்த FIR பதியப்பட்டுள்ளது. யஷ் தயாள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் குறை தீர்க்கும் போர்டல் மூலம் இளம் பெண் ஒருவர் அவர் மீது, பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் வைத்துள்ளார்.
News July 8, 2025
சுவாமிக்கு சாற்றும் மாலையை பக்தர்கள் அணியலாமா?

கடவுளின் சன்னதிக்குச் சென்ற அனைத்து பொருள்களுமே புனிதம் பெற்றுவிடும். அந்தவகையில், சன்னதியில் குடிகொண்டிருக்கும் தெய்வங்களுக்கு சாற்றப்படும் மாலைகளும் புனிதம் பெறும். அதனை பக்தர்களுக்கு அளிக்கும்போது அவர்களின் கடவுள் நம்பிக்கை மேலும் வலுப்பெறும். தனிநபர் (அ) வாகனங்கள் ஆகியவற்றுக்கு மாலை அணியும்போது, நமக்கான உத்வேகம் அதிகரிக்கும். தொடங்கும் காரியங்களும் நல்ல பலன்களை அளிக்கும்.