News October 26, 2025
DMK-ஐ எதிர்க்கும் கட்சிகளுக்கு G.K.வாசன் அழைப்பு

சட்டப்பேரவையில் தமாகாவின் குரல் ஒலிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எனவே, தமாகாவினர் கண்ணும் கருத்துமாக தேர்தல் பணியை செய்து, தமாகாவுக்கு உரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கவும், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கும் பாடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து 2026 தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
Similar News
News October 26, 2025
திமுகவில் இணைந்தனர்

2026 சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்ல வேண்டும் என்ற ஸ்டாலின் ஆணையை நிறைவேற்ற திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அடித்தளம் போடும் வகையில் மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் K.S.மூர்த்தி முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த பலர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.
News October 26, 2025
CM நிகழ்ச்சிக்காக பனைகள் வெட்டப்பட்டதா? Fact Check

தென்காசியில் CM நிகழ்ச்சிக்காக சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்பட்டதாக செய்தி பரவியது. இந்நிலையில், TN அரசின் தகவல் சரிபார்ப்பகம் இது தவறான செய்தி என்று தெரிவித்துள்ளது. 2 தனிநபர்கள் தங்களின் ஆபத்தான நிலையில் உள்ள 4 பனைகளை, உரிய அனுமதி பெற்று வெட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அரசாணை 238-ன் படி, ஒரு மரத்துக்கு 10 என்ற வீதத்தில் 40 பனைகளை வளர்க்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News October 26, 2025
மாதம் ₹4,000 உதவித்தொகை!

TN அரசின் <<17712443>>’அன்புக்கரங்கள்’<<>> திட்டம் போல் மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ திட்டம் உள்ளது. இதன் மூலம் தாய் (அ) தந்தை (அ) இருவரும் இல்லாத 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் அடிப்படை தேவைகள், கல்விக்காக மாதந்தோறும் ₹4,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.missionvatsalya.wcd.gov.in இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


