News February 3, 2025
பிராமணர்களுக்கு பதவி கொடுங்க: சுரேஷ் கோபி

நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக பிராமணர், நாயுடு போன்ற உயர் ஜாதிகளை சேர்ந்தவர்களை நியமித்தால்தான் பழங்குடியின மக்கள் முன்னேறுவார்கள் என கூறினார். மேலும், பழங்குடியின நலத்துறைக்கு அச்சமூகத்தை சேர்ந்தவர்களே அமைச்சராக நியமிக்கப்படுவது, மிகப்பெரிய சாபக்கேடு என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 7, 2026
₹6,600, ₹7,500.. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன்கடை ஊழியர்களுக்கு 15% அடிப்படை ஊதியம், 55% அகவிலைப்படி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் விற்பனையாளர்களுக்கு ₹7,500, கட்டுனர்களுக்கு <<19309935>>₹6,600 தொகுப்பூதியம்<<>> ஒரு வருடம் வழங்கப்படும். ஓராண்டுக்குப்பின், விற்பனையாளர்களுக்கு ₹39,600, கட்டுனர்களுக்கு ₹35,000 வரை காலமுறை ஊதியம் வழங்கப்படும். மேலும், 3% ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும்.
News March 7, 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து.. புதிய ஆதாரம் வெளியானது

விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடினால், நீலாங்கரை வீட்டில் வசிக்க முடியாது என வழக்கறிஞர் மூலம் தனக்கு மிரட்டல் வந்ததாக விஜய்யின் <<19319143>>மனைவி சங்கீதா<<>> செங்கல்பட்டு கோர்ட்டில் புதிய வழக்கு தொடுத்துள்ளார். அதில், தனக்கு நீதி கிடைக்கும் வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க உரிமை உள்ளதாகவும், பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், விஜய்யின் விவாகரத்து விவகாரம் நாளுக்கு நாள் பொது விவாதமாக மாறி வருகிறது.
News March 7, 2026
அடுத்தவர் உழைப்பில் குளிர்காயும் திமுக: அதிமுக

சைதை துரைசாமியின் ‘மனிதநேயம்’ பயிற்சி மையத்தில் பயின்று வெற்றிபெற்ற மாணவர்களை ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வென்றதாக கூறி விளம்பரம் செய்வது வெட்கக்கேடு என அதிமுகவின் பாப்புலர் முத்தையா விமர்சித்துள்ளார். அடுத்தவர் உழைப்பில் குளிர்காயும் திமுக அரசு, விளம்பர அரசியல் செய்வதாக சாடிய அவர், மக்கள் வரிப்பணத்தை செலவழித்து பொய் விளம்பரம் செய்வதை விடுத்து, உண்மையான உழைப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.


