News October 14, 2025

4 மாவட்டங்களில் பேய் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வருகிற 19-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியில் செல்லும்போது கவனமாக செல்லவும்.

Similar News

News October 14, 2025

உங்களின் சாய்ஸ் எது?

image

சீனியர் ஹீரோக்கள் இல்லாமல் இந்த வருடம் தீபாவளி ட்ரீட்டாக பிரதீப் ரங்கநாதனின் ‘டூட்’, துருவ் விக்ரமின் ‘பைசன்’, ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ ஆகிய 3 படங்கள் வெளியாக உள்ளன. இந்த 3 படங்கள் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், 3 படங்களின் டிரெய்லர்களும் வெளிவந்துவிட்டன. இவற்றில், உங்களின் ஆர்வத்தை தூண்டிய படம் எது.. கமெண்ட் பண்ணுங்க?

News October 14, 2025

BREAKING: அமைச்சர் சிவசங்கர் விடுவிப்பு

image

மணல் குவாரி மோதல் வழக்கில் இருந்து அமைச்சர் சிவசங்கர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆவினன்குடியில் சிவசங்கர் தலைமையில் 2015-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். மேலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக சிவசங்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் சிவசங்கர் உள்ளிட்ட 27 பேரை விடுவித்து கடலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News October 14, 2025

பெண்களுக்கு எதிராக திராவிட மாடல்: வானதி

image

திராவிட மாடல் ஆட்சி என்பது முழுவதும் பெண்களுக்கு எதிரான மாடலாக உள்ளது என்று வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். குடும்பத்தில் கூட ஆண் வாரிசுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெண்களுக்கு கொடுக்காததுதான், திராவிட மாடல் அரசாக பார்க்கிறோம். பெண்ணுரிமை பேசுகின்றன ஆட்சியில்தான் அதிகமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

error: Content is protected !!