News April 13, 2025
Ghibli-க்கு நோ சொல்லுங்க கரூர் எஸ்பி எச்சரிக்கை!

Ghibli-Style-புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக கரூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா எச்சரித்துள்ளார். சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 16, 2025
பூசாரியிடம் கத்தியை காட்டி மிரட்டியவர்கள் கைது

கரூர் : மண்மங்கலம், பள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (64) . கோயில் பூசாரியான இவர் கடந்த 13 ஆம் தேதி குமரன் பேக்கரி அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த யுவன்ராஜ் மற்றும் இன்பரசன் ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி சக்திவேலிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.300 பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட அரவக்குறிச்சி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
News April 15, 2025
கரூரில் இலவச கூடைப் பந்து பயிற்சி !

கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் கூடைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் கோடைகால இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் இன்று(ஏப்.14) முதல் மே.15ஆம் தேதி வரை கரூர் மாவட்ட திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 6 – 18 வயது உட்பட்ட வீரர் , வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 989497960 என்கிற எண்ணை அணுகவும். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!
News April 15, 2025
கரூரில் மழை பெய்யப் போகிறதாம் குடை முக்கியம்

கடலோர ஆந்திரபிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஒரு இடங்களிலும், கனமான மழையும் லேசான மழையும் மற்றும் கரூர் மாவட்டங்களில் பல பகுதியில் இன்று (ஏப்ரல் 15) இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.