News April 3, 2025

‘Ghibli’ செய்வோர் ஜாக்கிரதை.. சைபர் கிரைம் எச்சரிக்கை

image

சோஷியல் மீடியாக்களில் உங்களது புகைப்படங்களை பயன்படுத்தி மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். டிரெண்டிங் மோகத்தில் நீங்கள் பதிவிடும் போட்டோ, பிறந்தநாள் தகவல்களை திருடி, அனுமதியின்றி உங்கள் தரவுகளை எடுக்க முடியும். இதனால், விழிப்போடு இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. தற்போது டிரெண்டாகும் OpenAI ஜிபிலி செய்தவர்கள் அவர்களது போட்டோ, DOB பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

Similar News

News September 18, 2025

SCIENCE: காக்கைகள் உங்களை கொத்துவது ஏன் தெரியுமா?

image

காக்கைகள், தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய நபரை, சில ஆண்டுகள் கூட ஞாபகம் வைத்து பழிவாங்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. காக்கையின் மூளையில் உள்ள அமிக்தாலா எனும் பகுதிதான், மனிதர்களின் முகங்களை நினைவு வைத்துக்கொள்ள உதவுகிறதாம். எனவே, காக்கையை அச்சுறுத்தும் வகையில் நீங்கள் ஏதாவது செய்திருந்தால் தான், அது உங்கள் தாக்குமாம். காக்கையிடம் குட்டு வாங்கிய அனுபவம் இருக்கா?

News September 18, 2025

வருமான நிலையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது: CEA

image

பின்தங்கிய வருமான நிலையிலிருந்து, நடுத்தரமான வருமான நிலைக்கு வந்ததில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் (CEA) நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்த இவ்வளவு பெரிய நாடும் சமூக, பொருளாதார மாற்றத்தை ஜனநாயக வழியில் முயற்சிக்கவில்லை என பெருமிதப்பட்டுள்ளார். நம்முடைய வெற்றி பெற்ற திட்டங்களிலிருந்தும் நாம் சிலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News September 18, 2025

மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்காதீங்க: கிருஷ்ணசாமி

image

OPS, சசிகலா, தினகரன் ஆகியோரை சமாளிக்க முடியாமல் EPS திணறுகிறார் என்று கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். இதனை அரசியல் ரீதியாக மட்டுமே தீர்க்க வேண்டும் என்ற அவர், இதற்காக மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க கோரி EPS, அமித்ஷாவிடம் கடிதம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!