News April 15, 2025

Ghibli க்கு நோ சொல்லுங்க; சேலம் சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

Ghibli-புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக சேலம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.

Similar News

News February 15, 2026

ஏற்காட்டில் மர்ம மரணம்

image

சேலம் மாவட்டம் ஏற்காடு, நூர் தேர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்தவர் சுரேஷ்சுரேஷ் தான் வேலை செய்த விடுதி அறையிலேயே உயிரிழந்து கிடப்பதாக ஏற்காடு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்டமாக வலிப்பு வந்து கீழே விழுந்த போது தலையில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்தது.

News February 15, 2026

சேலத்தில் வசமாக சிக்கிய பெண்

image

துறையூரை சேர்ந்த சுகன்யாவிற்கு கடந்த 11-ம் தேதி திருச்சி GH-ல் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சுகன்யாவிற்கு உதவி செய்வது போல் பெண் நடித்து, அக்குழந்தையை கடத்திச் சென்றார். இதுகுறித்த புகாரின் பெயரில், போலீசார் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், சேலத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பதும், குழந்தை இல்லாத ஏக்கத்தில் கடத்தி செல்ல முடிவெடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

News February 15, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!