News August 10, 2024
தலைவலியில் இருந்து விடுபட!

எறும்பு போல சுறுசுறுப்பாக ஓடும் மனிதர்களை கூட எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்கு ஓரமாக உட்கார வைத்துவிடும் தலைவலி. என்ன செய்தாலும் மீண்டும் வந்து தொல்லை தரும் தலைவலியை நொடி பொழுதில் விரட்டி அடிக்கும் வீரியம் கொண்டது இஞ்சி என்கிறார்கள் மருத்துவர்கள். இஞ்சியை தோல் சீவி, சிறு துண்டுகளாக அறுத்து மென்று சாப்பிட்டால் தலைவலி குறையும். அடுத்தமுறை உங்களுக்கு வலி ஏற்பட்டால், இதை செய்து பாருங்கள்.
Similar News
News December 7, 2025
ஆறுபடையப்பனை மீண்டும் பார்க்க ரெடியா?

தியேட்டர்களில் சக்கைப்போடு போடும் ரீ-ரிலீஸ் படங்களின் வரிசையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படமும் இணைகிறது. 1999-ல் வெளியான ‘படையப்பா’ படம் ரஜினியின் பிறந்தநாளான வரும் 12-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரஜினியின் அதிரடி நடிப்பு, ஸ்டைல் மற்றும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. 80s, 90s கிட்ஸ்க்கு கூஸ்பம்ஸ் கொடுக்கும் படையப்பாவை மீண்டும் தியேட்டரில் பார்க்க ரெடியா?
News December 7, 2025
ரோஹித், விராட் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்

தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான தொடரில் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். 3-வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வாலும் இணைந்துள்ளார். இந்த சாதனையை முதலில் படைத்த இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா. இதனை தொடர்ந்து ரோஹித், ராகுல், விராட், கில் ஆகியோர் இந்த பட்டியலில் இணைந்தனர்.
News December 7, 2025
79 ஆண்டுகளாகியும் நீடிக்கும் காலனித்துவ மனநிலை: PM

சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளுக்கு பிறகும், நாம் காலனித்துவ மனப்பான்மையில் இருந்து விடுபடவில்லை என PM மோடி தெரிவித்துள்ளார். 2035-ல் நாம் 200 ஆண்டுகால காலனித்துவத்தை நிறைவு செய்கிறோம். எனவே அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் காலனி மனோபாவத்தை விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மெக்காலே கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 1835-ம் ஆண்டை தான் PM குறிப்பிடுகிறார்.


