News May 16, 2024
கோடை மழையால் ஏற்படும் சளி தொல்லை நீங்க…

கோடைக்காலத்தில் பொழியும் மழையால் ஏற்படுகிற நோய்களில் சளி, இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க வேப்பிலை, சீரகம், மிளகு, கற்பூரவள்ளி ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமாக தயார் செய்யவும். இதனை காலை – மாலை இருவேளை 3 நாள்கள் குடித்தால் மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News November 23, 2025
தலை சுற்ற வைக்கும் அம்பானி பள்ளியின் கட்டணம்!

மும்பையில் இயங்கி வரும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலில் வசூலிக்கப்படும் கட்டணம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. *Kindergarten to 7th: ₹1.70 லட்சம். * 8 -10th (ICSE): ₹1.85 லட்சம். *8- 10th (IGCSE): ₹5.9 லட்சம். * 11 – 12th (IBDP): ₹9.65 லட்சம். ஷாருக்கான், கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்களின் குழந்தைகள் இங்குதான் படிக்கின்றனர்.
News November 23, 2025
கூட்டணி: குழப்பத்தை ஏற்படுத்தும் காங்., அறிக்கை

காங்., சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்ததால், TVK உடன் கூட்டணி இல்லை என்று அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனால், காங்., வெளியிட்ட அறிக்கையில் திமுக என்றோ, இண்டியா கூட்டணி என்றோ எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மொட்டையாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. இதனால், விஜய் உடன் கூட்டணி பேச்சு தொடர்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
News November 23, 2025
காலையில் மாரடைப்பு.. காரணம் இதுதான்!

காலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் உடலில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பது காரணமாகிறது. இது உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் வெளியாவதால் ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் நீரிழப்பும் மாரடைப்பை தூண்டுவதற்கு ஒரு காரணமாக அமைகின்றன. முறையான தூக்கம், உடற்பயிற்சியால் இந்த ஆபத்தை தடுக்க முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். உஷாரா இருங்க..!


