News May 16, 2024

கோடை மழையால் ஏற்படும் சளி தொல்லை நீங்க…

image

கோடைக்காலத்தில் பொழியும் மழையால் ஏற்படுகிற நோய்களில் சளி, இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க வேப்பிலை, சீரகம், மிளகு, கற்பூரவள்ளி ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமாக தயார் செய்யவும். இதனை காலை – மாலை இருவேளை 3 நாள்கள் குடித்தால் மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Similar News

News December 6, 2025

புதுகை: தனியார் பள்ளி வேன் மோதி ஒருவர் பலி

image

தஞ்சாவூரை சேர்ந்தவர் விஜய் (25). இவருக்கும், புதுக்கோட்டை முதலிப்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (22) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் விஜய் நேற்று காலை முதலிப்பட்டியில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை பார்த்து விட்டு அவரது ஊருக்கு பைகில் சென்றபோது, தனியார் பள்ளி வேன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

News December 6, 2025

காஞ்சிபுரம்: போராட்டத்தில் 151 பேர் கைது

image

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (TNGOSA) சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 151 பேர் கைது செய்யப்பட்டனர்.

News December 6, 2025

உணவு விஷயத்தில் இந்த தவறு வேண்டாம்.. ஆபத்து!

image

நார்ச்சத்து, புரதம் இருக்கும் உணவுகளை சாப்பிட்டாலும் சோர்வாகவே உணர்கிறீர்களா? இதற்கு நீங்கள் சாப்பிடும் முறை காரணமாக இருக்கலாம். உணவை வேக வேகமாக மென்று விழுங்காதீங்க. இப்படி செய்தால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராது. அத்துடன் சுகர், இதய பிரச்னை, அஜீரணம் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால் எவ்வளவு நல்ல உணவை சாப்பிட்டாலும் பிரயோஜனம் இல்லை. எனவே, உணவை பொறுமையாக மென்று சாப்பிடுங்கள். SHARE.

error: Content is protected !!