News May 16, 2024

கோடை மழையால் ஏற்படும் சளி தொல்லை நீங்க…

image

கோடைக்காலத்தில் பொழியும் மழையால் ஏற்படுகிற நோய்களில் சளி, இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க வேப்பிலை, சீரகம், மிளகு, கற்பூரவள்ளி ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமாக தயார் செய்யவும். இதனை காலை – மாலை இருவேளை 3 நாள்கள் குடித்தால் மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Similar News

News November 26, 2025

ஜார்ஜ் கோட்டையே இலக்கு: தமிழிசை

image

நாளை, செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து தமிழிசையிடம் கேட்கப்பட்டது. அதற்கு, செங்கோட்டையன் என்ன செய்கிறார் என்பது எங்கள் இலக்கு அல்ல என்ற அவர், ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதே எங்கள் இலக்கு என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கெனவே தவெகவில் இணையவுள்ள தகவலுக்கு KAS, OPS மறுக்காத நிலையில், தமிழிசையின் இந்த பேச்சும் அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

News November 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 531 ▶குறள்: இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. ▶பொருள்: மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

News November 26, 2025

‘Secret Deal’ குறித்து மனம் திறந்த DK சிவக்குமார்

image

கர்நாடக அரசியலில் முதல்வர் பதவிக்கான போட்டி பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் முதல்வர் மாற்றம் குறித்து பொது வெளியில் விவாதிக்க விரும்பவில்லை என DK சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை முதல்வராக்க வேண்டும் என கேட்கவில்லை என்றும், இது எங்களில் சிலருக்கு இடையிலான ரகசிய ஒப்பந்தம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சியை எந்த விதத்திலும் பலவீனப்படுத்த விரும்பவில்லை என்றார்.

error: Content is protected !!