News September 13, 2024

வானில் பறக்க தயாராகுங்கள்: PM மோடி

image

இந்தியாவில் விரைவில் ஏர் டாக்ஸி சேவை நடைமுறைக்கு வரும் என PM மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆசிய பசிபிக் விமானத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், ஏர் டாக்ஸியில் பறக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்றார். இது விமானப் போக்குவரத்துத் துறையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்றும், இதன் மூலம் வானில் பறக்க வேண்டும் என்ற பலரது கனவு நிறைவேறும் எனவும் கூறினார்.

Similar News

News December 25, 2025

நாமக்கல்லில் உச்சம் தான்! மாற்றமே கிடையாது!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி ரூ. 6.40- ஆகவே நீடிக்கின்றது. முட்டை விலை உச்ச நிலையில் நீடிப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News December 25, 2025

அழகே பொறாமைப்படும் ஹிமாலயன் மோனல் PHOTOS

image

மயில் வண்ணங்களை கொண்ட இந்த பறவையின் பெயர் ஹிமாலயன் மோனல். இமயமலையில் காணப்படும் மோனல், நேபாளத்தின் தேசிய பறவையாக அறியப்படுகிறது. மின்னும் இறகுகளுடன் பிரகாசமாக ஜொலிக்கும் பறவையின் கிரீடம், அதன் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. பனிப்பாறைகளில் துள்ளி குதித்து விளையாடும் மோனலின் அழகை ரசிக்க, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்யுங்கள். பிடிச்சிருந்தா Like & SHARE

News December 25, 2025

பயங்கர ஏவுகணையை பரிசோதித்த இந்தியா

image

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் K-4 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணுசக்தியால் இயங்கும் ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கி கப்பலில் இருந்து, 3,500 கி.மீ., தூரம் பயணித்து தாக்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணை (SLBM) சோதனை செய்யப்பட்டுள்ளது. US, சீனா, ரஷ்யா 5,000 கி.மீ., தூரம் சென்று தாக்கும் SLBM-ஐ கொண்டுள்ள நிலையில், இந்தியா அதை நெருங்கி வருகிறது.

error: Content is protected !!