News September 13, 2024

வானில் பறக்க தயாராகுங்கள்: PM மோடி

image

இந்தியாவில் விரைவில் ஏர் டாக்ஸி சேவை நடைமுறைக்கு வரும் என PM மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆசிய பசிபிக் விமானத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், ஏர் டாக்ஸியில் பறக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்றார். இது விமானப் போக்குவரத்துத் துறையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்றும், இதன் மூலம் வானில் பறக்க வேண்டும் என்ற பலரது கனவு நிறைவேறும் எனவும் கூறினார்.

Similar News

News December 12, 2025

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்!

image

தலைப்பே தலைசுற்ற வைக்கிறதல்லவா? 2021-ல் ஹாலிமா சிஸ்ஸே(29) என்ற பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி நாட்டை சேர்ந்த ஹாலிமாவுக்கு, சிஸேரியன் மூலம் பிறந்த 5 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் நலமாக உள்ளனர். ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறப்பது, மருத்துவ வரலாற்றிலேயே மிகவும் அரிதான விஷயம் எனவும் கூறப்படுகிறது.

News December 12, 2025

BREAKING: ஓய்வு முடிவை வாபஸ் பெற்ற வினேஷ் போகத்

image

பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். அதே வெறியுடன் மீண்டும் களத்திற்கு திரும்ப உள்ளதாக உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கின்(2024) இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்திருந்தார். தற்போது காங்கிரஸில் இணைந்த அவர் ஹரியானாவின் ஜூலானா தொகுதி MLA-வாக உள்ளார்.

News December 12, 2025

₹1,000 பணம் வரவில்லையா? இதை செய்யுங்க!

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்த <<18541396>>17 லட்சம் மகளிருக்கு ₹1,000 வரவு<<>> வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தில் சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், பணம் கிடைக்காத 11 லட்சம் பேர் உள்ளிட்ட பலரும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பணம் வரவில்லை என்றால் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!