News February 28, 2025
முந்துங்கள்.. ₹20 லட்சம் சன்மானம்…

கோலிவுட்டின் தலைநகரமாக சென்னை சாலிகிராமம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அங்கு ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுபவமிக்க இயக்குநரின் தரமான படைப்பு ஒன்று தயாராக இருப்பதாகவும், அதற்கு ₹2 கோடி முதலீடு பெற்றுத் தருவோருக்கு ₹20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் போஸ்டர் கூறுகிறது. ஆனால், இதனை யார் ஒட்டியது என்ற தகவல் இல்லை.
Similar News
News March 1, 2025
இவர்கள் ஆட்சிக்கு வருவது பேராபத்து: ஜவாஹிருல்லா

அரசியலையும் சிலர் சினிமாவை போல் நினைப்பதாக நடிகர் விஜயை மறைமுகமாக ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். பாசிசமா, பாயாசமா என்று சிலர் சிறுபிள்ளைத்தனமாக பேசுவதாகவும், அவர்கள் ஆட்சிக்கு வருவது தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்றும் சாடியுள்ளார். சினிமாவை போல் அரசியல் இருக்காது என்றும், பேச்சை கேட்பவர்கள் எல்லாம் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 1, 2025
பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் ஜியா ஜுவான்-மெங் யங் ஜோடி மோதியது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
News March 1, 2025
முதல்வருக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் தன்னை அரசியல் கட்சி தலைவராக்கியதாகவும், ஆனால் ஸ்டாலின் வழக்குப்போட்டு தன்னை நிச்சயம் முதல்வராக்கி விடுவார் என்றார். அரசியல் ரீதியாக எத்தனை இடையூறுகளை ஏற்படுத்தினாலும், அதை உடைத்தெறிவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.