News April 14, 2024
ஐ.எம்.எஃப் இயக்குநராக ஜார்ஜிவா மீண்டும் தேர்வு

ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா 2ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் உலக மக்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், 2019இல் இருந்து ஐ.எம்.எஃப்-ஐ வழிநடத்தி வருகிறார். இதற்கு முன் இவர் உலக வங்கியின் சி.இ.ஓ-ஆகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
Similar News
News December 9, 2025
CM பதவிக்கு ₹500 கோடி.. சித்து மனைவி சஸ்பெண்ட்

₹500 கோடி கொடுத்து CM பதவியை வாங்க தங்களிடம் பணம் இல்லை என கூறிய பஞ்சாப் காங்., நிர்வாகி நவ்ஜோத் கவுர் சித்துவை அக்கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அம்மாநில காங்., தலைவர் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக, <<18500547>>கவுரின்<<>> கருத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.
News December 9, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News December 9, 2025
சபரிமலை பக்தர்கள் இந்த பாதையை தவிர்க்கவும்

சபரிமலை தரிசனத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் பாரம்பரிய காட்டு வழி பயணத்தை தவிர்க்க வேண்டும் என கேரள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். யானை, சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடப்படுகிறது. இந்த வழிகளில் வனத்துறை, தீயணைப்பு மீட்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் எச்சரிக்கை தேவை என்றும் கூறியுள்ளனர்.


