News April 14, 2024
ஐ.எம்.எஃப் இயக்குநராக ஜார்ஜிவா மீண்டும் தேர்வு

ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா 2ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் உலக மக்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், 2019இல் இருந்து ஐ.எம்.எஃப்-ஐ வழிநடத்தி வருகிறார். இதற்கு முன் இவர் உலக வங்கியின் சி.இ.ஓ-ஆகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
Similar News
News November 21, 2025
ஹலோ ஹலோ சுகமா.. ட்ரை பண்றீங்களா?

‘ஹலோ’ என்ற வார்த்தையை இன்று ஒரு சிறப்பு தினமாக கொண்டாடுகிறோம். 1973- ம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் எகிப்து, சிரியா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போரில், பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் ‘உலக ஹலோ தினம்’ என்பதை ஃபிரியன், மைக்கேல் சகோதரர்கள் அறிமுகப்படுத்தினர். இந்த நாளில், பிரிந்த உறவுகளிடம் கூட ஹலோ சொல்லி உறவை புதுமையாக்கலாம். நீங்கள் யாருக்கு ஹலோ சொல்ல போறீங்கனு கமெண்ட் பண்ணுங்க.
News November 21, 2025
பட நிகழ்ச்சியில் பாடல் பாடியதற்கு ₹1 கோடி சம்பளமா?

பட தயாரிப்பை விட, அதன் புரமோஷனுக்கே அதிகம் செலவிடுவதற்கு சமீபத்தில் நடந்த ‘வாரணாசி’ பட நிகழ்ச்சியே சாட்சி. டைட்டில் ரிலீஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் ₹27 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், மற்றுமொரு ஆச்சரியமடைய வைக்கும் செய்தியும் வெளியாகியுள்ளது. இதே ஈவென்ட்டில், ஒரு பாடல் நிகழ்ச்சியை நடத்திய ஸ்ருதிஹாசனுக்கு ₹1 கோடி சம்பளம் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News November 21, 2025
அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், முதலில் சூடுபிடித்த சிபிஐ விசாரணையில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உரிய நேரத்தில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், நவ.27-க்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு அன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அஜித் குமார் கொலை குறித்த மேலும் பல உண்மைகள் குற்றப்பத்திரிகையில் வெளியாக வாய்ப்புள்ளது.


