News April 14, 2024
ஐ.எம்.எஃப் இயக்குநராக ஜார்ஜிவா மீண்டும் தேர்வு

ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா 2ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் உலக மக்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், 2019இல் இருந்து ஐ.எம்.எஃப்-ஐ வழிநடத்தி வருகிறார். இதற்கு முன் இவர் உலக வங்கியின் சி.இ.ஓ-ஆகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
Similar News
News November 19, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹6,000 உயர்ந்தது

கடந்த 5 நாள்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று (நவ.19) காலை கிராமுக்கு ₹3-ம், கிலோவுக்கு ₹3,000-ம் உயர்ந்தது. இதன்படி, சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹173-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,73, 000-க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் கிராமுக்கு ₹3 உயர்ந்து ₹176-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹1,76,000-க்கும் விற்பனையாகிறது.
News November 19, 2025
அப்பாவானார் பிரபல தமிழ் நடிகர் ❤️❤️❤️

பிரேம்ஜி அமரன் – இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். தந்தையான பிரேம்ஜி அமரனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மனைவி இந்துவை அவர் காதலித்து கரம்பிடித்தார். இருவருக்கும் கடந்த 2024-ல் திருமணம் நடந்தது. திருத்தணியில் நடந்த இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தம்பதியரை வாழ்த்தலாமே!
News November 19, 2025
TN-ல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: ஆதவ் அர்ஜுனா

<<18327587>>ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி<<>> கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, TN-ல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக சாடியுள்ளார்.
எங்கும் சுதந்திரமாக சென்று வர முடியாத அளவிற்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறுவதாக அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தனி பாதுகாப்பு திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.


