News April 14, 2024
ஐ.எம்.எஃப் இயக்குநராக ஜார்ஜிவா மீண்டும் தேர்வு

ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா 2ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் உலக மக்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், 2019இல் இருந்து ஐ.எம்.எஃப்-ஐ வழிநடத்தி வருகிறார். இதற்கு முன் இவர் உலக வங்கியின் சி.இ.ஓ-ஆகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
Similar News
News December 25, 2025
பொங்கல் பரிசுடன் பணம்.. கடந்து வந்த பாதை

பொங்கல் பரிசு குறித்த அரசின் அறிவிப்பு தள்ளிப்போவதால் மக்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2026 பொங்கல் பரிசுடன் ரொக்கம் குறித்த அறிவிப்பு நிச்சயம் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தேர்தல் சமயம் என்பதால் பம்பர் ஆஃபராக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்கும் வழக்கம் எப்போது வந்தது எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.
News December 25, 2025
ஒரே வீட்டில் 44 பேர் எரித்துக் கொலை.. ஓயாத ஓலம்

1968-ல் விவசாய கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக, பண்ணையாரின் அடியாட்களால் ஒரு கிராமமே தாக்குதலுக்கு உள்ளானது. இதில் பயந்து ஓடிய பெண்கள், குழந்தைகள் தப்பித்துக்கொள்ள ராமையா என்பவரது வீட்டிற்குள் சென்றனர். ஆனால், அந்த வீடு தாழிடப்பட்டு தீ வைத்ததில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த ஆறாத வடுவான கீழ்வெண்மணி படுகொலை நடந்த தினமான இன்றும், அவர்களது அலறல்கள் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.
News December 25, 2025
இந்திய பொருள்களுக்கு உலகளவில் அங்கீகாரம்

இந்திய பொருள்களுக்கு புவிசார் குறியீடு(GI) வழங்குவதை எளிதாக்கும் வகையில் சட்டங்களை திருத்த நியூசிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது. IND, NZ இடையே கையெழுத்தான <<18642468>>தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்<<>> (FTA) கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனை முடிப்பதற்கான காலக்கெடு, FTA அமலுக்கு வந்ததிலிருந்து 18 மாதங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.


