News April 14, 2024
ஐ.எம்.எஃப் இயக்குநராக ஜார்ஜிவா மீண்டும் தேர்வு

ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா 2ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் உலக மக்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், 2019இல் இருந்து ஐ.எம்.எஃப்-ஐ வழிநடத்தி வருகிறார். இதற்கு முன் இவர் உலக வங்கியின் சி.இ.ஓ-ஆகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
Similar News
News November 20, 2025
நீங்கள் எதை இழந்து வருகிறீர்கள்?

இத்தனை வருடமாக வேலைக்கு செல்லும் நீ எவ்வளவு சேமித்து வைத்துள்ளாய்? என்ற கேள்வி, நீங்கள் வேலை பார்க்க தொடங்கிய அடுத்த சில ஆண்டுகளில் கேட்கும் ஒன்றாகவே இருக்கும். பணத்தை சேர்க்க முடியாததற்கு நம்மில் பல காரணங்கள் இருக்கலாம். அதேபோல், வருமானத்தை நோக்கி பயணிக்கும் நேரத்தில் உறவுகள், நண்பர்கள், சுப நிகழ்வுகள், திருவிழாக்கள் என பலவற்றை இழக்கிறோம். உங்கள் வாழ்க்கை ஓட்டத்தில் நீங்கள் இழந்தது என்ன?
News November 20, 2025
BREAKING: திமுகவுடன் கூட்டணி.. உறுதியாக அறிவித்தார்

திமுக – காங்., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக செய்தி வெளியாகி வருகிறது. மேலும், தவெக- காங்., இடையே பேச்சு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தியா கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என செல்வப் பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2025
கவர்னரை கருணாநிதி பதிலால் சாடிய கனிமொழி

மசோதாக்கள் தொடர்பான வழக்கில் குறிப்பிட்ட காலத்திற்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என SC கூறியது. இந்நிலையில், உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது? என்று கேட்டபோது, கவர்னர் வேலை பார்ப்பது என்று முன்னாள் CM கருணாநிதி கூறியதாக கனிமொழி மேற்கோள் காட்டியுள்ளார். இனியாவது அரசமைப்புக்கு உட்பட்டு கவர்னர், தனது பணியை செவ்வனே செய்வார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


