News April 14, 2024
ஐ.எம்.எஃப் இயக்குநராக ஜார்ஜிவா மீண்டும் தேர்வு

ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா 2ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் உலக மக்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், 2019இல் இருந்து ஐ.எம்.எஃப்-ஐ வழிநடத்தி வருகிறார். இதற்கு முன் இவர் உலக வங்கியின் சி.இ.ஓ-ஆகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
Similar News
News October 19, 2025
8 மாவட்டங்களில் பேய் மழை வெளுக்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News October 19, 2025
சேலையில் வார்த்த வெண்ணிலவாய் ஸ்ருதி

கோலிவுட்டில் தொடங்கிய ஸ்ருதியின் நடிப்பு பயணம், ஆங்கில படங்கள் வரை தொடர்கிறது. ‘7 ஆம் அறிவு’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், ‘3’ பட ஜனனியை மறவாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டில் ஏராளம். அப்படிப்பட்ட தனது ரசிகர்களுக்காக தீபாவளி ஸ்பெஷல் போட்டோக்களை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய உடையின் நளினத்தில் மின்னும் இந்த தமிழ் பெண்ணின் புகைப்படங்களை மேலே Swipe செய்து பாருங்க.
News October 19, 2025
GST 2.0: கல்லா கட்டிய கார், பைக் நிறுவனங்கள்

ஜிஎஸ்டி மறுசீரமைப்பின் எதிரொலியாக, பண்டிகை காலத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உச்சபட்ச விற்பனையை பதிவு செய்துள்ளன. நவராத்திரியின் 8 நாள்களில் மாருதி சுசூகி 1.65 கார்களையும், டாடா மோட்டர்ஸ் 50,000 கார்களையும் விற்பனை செய்துள்ளன. அதேபோல் மஹிந்திரா 60%, ஹுண்டாய் 72% அதிக விற்பனையை பதிவு செய்துள்ளன. மேலும் ஹீரோ, பஜாஜ் போன்ற டூவீலர் நிறுவனங்கள் 2 மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளன.