News April 14, 2024

ஐ.எம்.எஃப் இயக்குநராக ஜார்ஜிவா மீண்டும் தேர்வு

image

ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா 2ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் உலக மக்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், 2019இல் இருந்து ஐ.எம்.எஃப்-ஐ வழிநடத்தி வருகிறார். இதற்கு முன் இவர் உலக வங்கியின் சி.இ.ஓ-ஆகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

Similar News

News November 25, 2025

UK-ல் இருந்து லட்சுமி மிட்டல் வெளியேறுகிறாரா?

image

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டல், UK-வில் எஃகு உருக்கு தொழிலில் கொடிகட்டி பறக்கிறார். இன்று உலகின் 104-வது செல்வந்தராகவும் உள்ளார். இந்நிலையில், UK-வில் குடும்ப தொழிலை வாரிசுகளுக்கு கைமாற்றினால் வாரிசு வரி உள்பட தொழிலதிபர்களுக்கான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், UK-வை விட்டு வெளியேறி, துபாயில் குடியேறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அவருக்கு மாளிகை ஒன்றும் உள்ளதாம்.

News November 25, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 530 ▶குறள்: உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல். ▶பொருள்: ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

News November 25, 2025

தள்ளிப்போன திருமணம்.. ஸ்மிருதி எடுத்த முடிவு

image

கொண்டாட்டத்துடன் நடைபெற வேண்டிய ஸ்மிருதி மந்தனாவின் திருமணம், அவரது தந்தையின் உடல்நலக் குறைவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது காதலரான பலாஷ் முச்சலும் அதீத காய்ச்சலால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கஷ்டமான சூழலில், திருமணம் சார்ந்த பதிவுகளை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து ஸ்மிருதி நீக்கியுள்ளார். எனவே, ‘கவலைப்படாதீங்க மந்தனா’ என நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

error: Content is protected !!