News April 14, 2024
ஐ.எம்.எஃப் இயக்குநராக ஜார்ஜிவா மீண்டும் தேர்வு

ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா 2ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் உலக மக்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், 2019இல் இருந்து ஐ.எம்.எஃப்-ஐ வழிநடத்தி வருகிறார். இதற்கு முன் இவர் உலக வங்கியின் சி.இ.ஓ-ஆகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
Similar News
News December 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 9, கார்த்திகை 23 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News December 9, 2025
இந்தியா கனவு உலகில் இருக்க கூடாது: PAK தளபதி

PAK-ன் ராணுவ திறன் குறித்து இந்தியா கனவு உலகில் இருக்க கூடாது என அந்நாட்டு தலைமை தளபதி அசிம் முனீர் எச்சரித்துள்ளார். முன் எப்போதும் இல்லாத வகையில், தங்கள் நடவடிக்கை வேகமாகவும், தீவிரமாகவும் இருக்கும் எனவும், ஆபரேசன் சிந்தூர் என்பது எதிர்கால போருக்கான Case Study என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது போர்கள் சைபர், AI, குவாண்டம் கம்பியூட்டிங் என பரிணாமம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
CM பதவிக்கு ₹500 கோடி.. சித்து மனைவி சஸ்பெண்ட்

₹500 கோடி கொடுத்து CM பதவியை வாங்க தங்களிடம் பணம் இல்லை என கூறிய பஞ்சாப் காங்., நிர்வாகி நவ்ஜோத் கவுர் சித்துவை அக்கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அம்மாநில காங்., தலைவர் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக, <<18500547>>கவுரின்<<>> கருத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.


