News April 14, 2024
ஐ.எம்.எஃப் இயக்குநராக ஜார்ஜிவா மீண்டும் தேர்வு

ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா 2ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் உலக மக்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், 2019இல் இருந்து ஐ.எம்.எஃப்-ஐ வழிநடத்தி வருகிறார். இதற்கு முன் இவர் உலக வங்கியின் சி.இ.ஓ-ஆகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
Similar News
News December 7, 2025
ஹிந்தி திணிப்பை ஏற்க கூடாது: அன்புமணி

உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கிய UGC-க்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 3-வது மொழியாக அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எதையும் கற்கலாம் என கூறினாலும், அது மறைமுக ஹிந்தித் திணிப்பு தான் என்றும் சாடியுள்ளார். இந்த உத்தரவை UGC திரும்ப பெற வலியுறுத்தியுள்ள அவர், TN-ல் இது அனுமதிக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
News December 7, 2025
சச்சினின் சாதனையை முறியடித்த கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை தொடர்நாயகன் (MOS) விருது வென்றவர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். SA-வுக்கு எதிரான ODI தொடரில் 302 ரன்கள் குவித்த கோலிக்கு MOS வழங்கப்பட்டது. இது அவருக்கு 20-வது விருதாகும். சச்சின் 19 முறை MOS வென்றிருந்தார். அதேபோல, ODI-ல் அதிகமுறை MOS வென்றவர்கள் பட்டியலில் ஜெயசூர்யாவுடன் 2-வது இடத்தை கோலி பகிர்ந்துள்ளார். இருவரும் 11 முறை வென்றுள்ளனர்.
News December 7, 2025
அலர்ட்.. 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவுநேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் இருக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க


