News April 14, 2024

ஐ.எம்.எஃப் இயக்குநராக ஜார்ஜிவா மீண்டும் தேர்வு

image

ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா 2ஆவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் உலக மக்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், 2019இல் இருந்து ஐ.எம்.எஃப்-ஐ வழிநடத்தி வருகிறார். இதற்கு முன் இவர் உலக வங்கியின் சி.இ.ஓ-ஆகவும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

Similar News

News November 20, 2025

BREAKING: விஜய் முக்கிய முடிவு… தொண்டர்கள் மகிழ்ச்சி

image

கரூர் துயருக்கு பிறகு, மீண்டும் விஜய் பரப்புரையை தொடங்கவுள்ளார். டிச.4-ல் சேலத்தில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு தவெக தரப்பில் SP-யிடம் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த சமயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளதால், அனுமதி வழங்குவது குறித்து போலீஸ் தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் தொடங்கவுள்ள பரப்புரை விஜய்யின் அரசியலை தீவிரப்படுத்துமா?

News November 20, 2025

‘மருதநாயகம்’ அப்டேட் கொடுத்த கமல்!

image

கமல்ஹாசனின் கனவு திரைப்படம் ‘மருதநாயகம்’. அந்த காலகட்டத்திலேயே மிக அதிக பொருள்செலவில் படப்பிடிப்பு தொடங்கி, பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், அந்த ஆசை தனக்கும் இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் காலத்தில் ‘மருதநாயகம்’ சாத்தியப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

சபரிமலை ஸ்பாட் புக்கிங்: இனி 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

image

சபரிமலையில் நவ.24 வரை ஸ்பாட் புக்கிங் மூலம் தினம் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கேரள ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பம்பா, எருமேலி, செங்கன்னூரில் செயல்பட்டு வந்த ஸ்பாட் புக்கிங் மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், <<18327487>>நிலக்கல்<<>>, வண்டிப்பெரியாரில் மட்டுமே ஸ்பாட் புக்கிங் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!