News March 15, 2025
நத்தம் புளி, நல்லூர் வரகுக்கு புவிசார் குறியீடு

நத்தம் புளி, நல்லூர் வரகு, ஆயக்குடி கொய்யா, வேதாரண்யம் முல்லை, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுவரை 35 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 17, 2025
இபிஎஸ்-க்கு ஆதரவாக களமிறங்கிய ஓபிஎஸ்

சட்டப்பேரவையில் காரசாரமாக விவாதம் நடந்து வரும் நிலையில், EPSக்கு ஆதரவாக OPS குரல் கொடுத்தார். கடன் வாங்காமல் இருக்க அமைத்த குழு என்ன செய்கிறது என இபிஎஸ் கேள்வி எழுப்பினார். அவரின் பேச்சை இடைமறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் சொல்ல முயற்சித்தார். இதை பார்த்த உடன், சட்டென்று எழுந்த OPS, கடன்களை மூலதனங்களுக்கே செலவிட வேண்டும் என EPSக்கு ஆதரவாக பேசினார். இதை அங்கிருந்த அனைவரும் உற்று நோக்கினர்.
News March 17, 2025
Loan Appகளை டவுன்லோடு செய்யாதீங்க

ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால், போலி Loan Appகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். பணம் தேவைப்படும் மக்களை குறிவைத்து, மிகக்குறைந்த வட்டி, விரைவான ஒப்புதல் என ஆசை வார்த்தைகள் கூறி மோசடிக் கும்பல்கள் வலை விரிக்கின்றன. இதை நம்பி, Loan Appகளை பதிவிறக்கம் செய்யும்போது, பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, மோசடி அரங்கேற்றப்படுவதாக எச்சரித்துள்ளனர்.
News March 17, 2025
குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுக்க ஆணை

அனைத்து பள்ளிகளிலும் வரும் 26ம் தேதி பெற்றோர் – ஆசிரியர் கழக கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், Good touch, Bad touch குறித்தும், POCSO சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.