News March 28, 2025

விரல் ரேகை பதிந்தால் மட்டுமே GAS சிலிண்டர்?

image

சமையல் GAS சிலிண்டர் வாடிக்கையாளர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்யவில்லை எனில் சிலிண்டர் கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மானிய விலை சிலிண்டர் பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணிகள் நடக்கிறது. இதற்கு சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் GAS ஏஜென்சிக்கு சென்று, விரல் ரேகை பதிய வேண்டும். இப்பணியை, வரும் 31ம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 6, 2025

புயல் மீண்டும் உருவாகிறது.. கனமழை பொளந்து கட்டும்

image

டிட்வா புயலின் தாக்கத்தில் இருந்து தமிழகம் மீண்டு வருகிறது. இந்நிலையில், டிச.12 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், டிச.15-ம் தேதிக்கு பிறகு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது புயலாக மாறக்கூடும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 6, 2025

பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

image

தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ONGC தளவாடங்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திருவாரூர் மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2015-ல் ONGC நிறுவனத்திற்கு எதிராக போராடியபோது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

News December 6, 2025

கார்த்திகை தீபம், காவி தீபமாக மாறக்கூடாது: கோவி.செழியன்

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டத்திட்டத்தின் அடிப்படையில் என்ன நெறிமுறைகள் இருந்ததோ, அதை தான் திமுக அரசும், CM ஸ்டாலினும் செயல்படுத்தியதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். ஆன்மிகத்தின் பெயரால், மதத்தின் பெயரால் பாஜக உருவாக்க நினைத்த தீயை, CM ஸ்டாலின் அணைத்துள்ளதாக அவர் கூறினார். கார்த்திகை தீபம், காவி தீபமாக மாறக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!