News May 4, 2024

பூண்டு விலை உயர்ந்தது

image

வரத்து குறைந்ததால் பூண்டு விலை திடீரென அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 50 லாரிகளில் பூண்டு கொண்டு வரப்படும். இந்நிலையில், தற்போது அங்கு அறுவடை சீசன் என்பதால் வரத்து குறைந்தது. இதனால் கடந்த வாரம் கிலோ ₹150 என்ற அளவில் விற்பனையான பூண்டு தற்போது அதிகரித்துள்ளது. தற்போது, முதல் தர பூண்டு கிலோ ₹250, 2ஆம் தரம் – ₹200, 3ஆம் தரம் -₹170க்கு விற்பனையாகிறது.

Similar News

News November 17, 2025

பாஜகவுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் கவர்னர்: MP

image

மேற்கு வங்​கத்​தில் TMC தொண்​டர்​களை அழிக்க கவர்னர் ஆனந்த போஸ், ஆயுதங்களை​ பாஜக​வினருக்கு வழங்குகிறார் என மே.வங்க MP கல்​யாண் பானர்​ஜி பேசியுள்ளார். கவர்னர் மாளிகையில் கிரிமினல்​களுக்கு அடைக்​கலம் கிடைப்பதாகவும், இதையெல்லாம் நிறுத்த வேண்​டும் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், கல்​யாண் மன்னிப்பு கேட்கவில்லை எனில் சட்​ட நடவடிக்கை எடுப்பேன் என கவர்னர் எச்சரித்துள்ளார்.

News November 17, 2025

BREAKING: அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார்

image

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் EPS-ஐ தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அதிமுக தலைமையிலான NDA கூட்டணியை உறுதிசெய்த வாசன், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசித்துள்ளார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், NDA கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரவிருப்பதாகவும், 2026-ல் பிஹாரில் வென்றதை விட அதிக இடங்களில் NDA வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயங்காது

image

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கேரளாவில் சமீபத்தில் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கடந்த 7 நாள்களுக்கு மேல் மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்கள் இயங்கவில்லை. இந்நிலையில், வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயங்காது என்றும், முதல்வர் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் கூறியுள்ளது.

error: Content is protected !!