News September 20, 2025
தமிழ்நாட்டில் ”கஞ்சா” ஆம்லேட்: EPS

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் தாரளமாக கிடைப்பதால், தமிழக இளைஞர்கள் சீரழிவதாக EPS குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சா சாக்லெட் வடிவத்தில் வந்துள்ளது; ஆம்லெட்டில் கூட கஞ்சாவை கலக்கி விற்கிறார்கள் என சாடிய அவர், போதைப்பொருள் அதிகரிப்பு பற்றி சட்டசபையில் பலமுறை பேசினேன். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத CM, இப்போது தாமதமாக விழித்துக் கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட CM நமக்கு தேவையா என கேள்வி எழுப்பினார்.
Similar News
News September 20, 2025
ஏன் தான் டாக்டர்கள் கிறுக்குறாங்களோ!

இந்த சந்தேகம் அனைவருக்குமே வந்திருக்கும். Prescription-ஐ பார்த்தால், என்ன எழுதி இருக்கிறார் என்றே புரியாது. இதனால், பல ஆபத்துகளும் ஏற்படலாம். *மருந்துகடையில் கடைக்காரர் மாத்திரையை மாற்றி கொடுக்கலாம் *மாத்திரையின் Dosage மாறலாம், எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற குழப்பமும் ஏற்படலாம். எனவே, டாக்டர்கள் புரியும்படி, எழுதி கொடுப்பதே சாலச்சிறந்தது. இதனை விளையாட்டாக கருதாமல், அனைவருக்கும் பகிரவும்.
News September 20, 2025
நாகையில் விஜய்.. பூம்புகாரை கையிலெடுத்த ஸ்டாலின்

கீழடிக்கு அடுத்ததாக, பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று நாகை, திருவாரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், அதன் அருகில் உள்ள பூம்புகார் குறித்து CM கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே, கடந்த வார பரப்புரைக்கிடையே, கொள்கையில்லா கூட்டத்தை சேர்த்து, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல என தெரிவித்திருந்தார்.
News September 20, 2025
காயங்கள், வலிகளை மறக்கவில்லை: சாம் பிட்ரோடா

பாக்., உள்பட அண்டை நாடுகளில் இருக்கையில் இந்தியாவில் உள்ளது போல உணர்கிறேன் என்று காங்கிரஸை சேர்ந்த சாம் பிட்ரோடா கூறியதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள பிட்ரோடா, நம் அண்டை நாடுகளுக்கும் நமக்கும் உள்ள பொதுவான வரலாறு, சமூக, கலாசார ஒற்றுமைகளின் அடிப்படையில் அப்படி கூறியதாகவும், அந்நாடுகளால் ஏற்பட்ட காயங்கள், வலிகளை மறக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.