News April 24, 2024
குண்டர் சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும்

சென்னை பள்ளிக்கரணையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி சர்மிளா தற்கொலை செய்துகொண்டது வேதனையளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பெற்றோர்களே அனைத்துக்கும் காரணம் என சர்மிளா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதால், அவர்களை உடனே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும், ஆணவக்கொலைத் தடுப்புச் சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 2, 2026
ஜனநாயகன் vs பராசக்தி: முந்துவது யார்?

ஜனநாயகன், பராசக்தி இரு படங்களில் எந்த படம் வெற்றிக் கொடியை நாட்டும் என்ற கேள்விதான் தற்போது ரசிகர்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது. சோஷியல் மீடியாவை பொறுத்தவரை தற்போது ஜனநாயகனே சற்று முந்தி இருக்கிறது எனலாம். விஜய் படத்திற்கு தமிழகத்தில் 500- 550 தியேட்டர்களும், SK படத்துக்கு 400- 450 வரை தியேட்டர்களும் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க இதில் எந்த படத்துக்கு வெயிட்டிங்?
News January 2, 2026
செங்கோட்டையன் சம்பவம்.. EPS நெக்ஸ்ட் மூவ்

அதிமுகவில் எதிர்பார்த்த சில முக்கிய புள்ளிகள் <<18737961>>விருப்ப மனு<<>> அளிக்கவில்லை என்ற தகவல் EPS-ஐ அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். கூட்டணி வலிமை பெறட்டும், அதன் பிறகு பார்க்கலாம் என்ற நினைப்பில் உள்ள அந்த புள்ளிகளை, தவெகவில் இணைக்க செங்கோட்டையன் காய் நகர்த்தி வருவதாகவும் அதிமுக தலைமைக்கு தகவல் சென்றுள்ளதாம். இதனால், இந்த புள்ளிகளை கண்காணிக்க மூத்த தலைவர்களுக்கு EPS உத்தரவிட்டுள்ளாராம்.
News January 2, 2026
பொங்கல் பரிசு பணம்.. முக்கிய தகவல் கசிந்தது

பொங்கல் <<18728682>>பரிசுத் தொகுப்புக்காக ₹248 கோடி<<>> ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ரொக்கம் குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் கசிந்துள்ளது. 2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹3,000 வழங்க அரசுக்கு சுமார் ₹6,500 கோடி தேவை. ஏற்கெனவே மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகைக்கு ₹1,300 கோடி செலவாகிறது. இதனால், மேலும் நிதிச்சுமை ஏற்படும் என்பதால் அரசு நீண்ட யோசனையில் உள்ளதாம். உங்கள் கருத்து?


