News August 6, 2024
ஒரே வாரத்தில் 17 பேர் மீது குண்டர் சட்டம்

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்து, சென்னையில் ரவுடிகள், கொலையாளிகள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 27ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை ஒரு வார காலத்தில் 17 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 18, 2026
அரசு கஜானாவில் போதை பொங்கல்: அருண்ராஜ்

தமிழர்களின் இல்லங்களில் இன்பம் பொங்கியதோ இல்லையோ, அரசின் கஜானாவில் மது விற்பனை பணம் மட்டும் பொங்கி வழிந்துள்ளதாக அருண்ராஜ் விமர்சித்துள்ளார். 4 நாள்களில் ₹900 கோடி வரை மது விற்பனை நடந்துள்ளதாக கூறியுள்ள அவர், ‘மனமகிழ் மன்றங்கள்’ வழியாக கள்ள மது விற்பனை ஆறாக ஓடியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கொல்லைப்புறமாக மது விற்பனையை பெருக்குவதுதான் திடாவிட மாடல் ஆட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 18, 2026
பாஜகவுக்கு எத்தனை சீட்: இன்று முடிவாகிறதா?

PM மோடியின் TN வருகைக்கு முன் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என TN பாஜக தேர்தல் பொறுப்பாளர் <<18874134>>பியூஷ் கோயல்<<>> அறிவித்திருந்தார். இந்நிலையில், 2 நாள் பயணமாக இன்று அவர் சென்னை வருகிறார். NDA கூட்டணி கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ள அவர், இன்றே அதிமுகவுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜக 50 தொகுதிகள் வரை கேட்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 18, 2026
கண்டுபிடி..! கண்டுபிடி..!

உங்கள் கண்களுக்கு ஒரு டெஸ்ட். இந்த புகைப்படத்தில் காணப்படும் வட்டங்களில், எத்தனை வட்டங்களில் கருப்பு புள்ளிகள் உள்ளன என கரெக்ட்டா சொல்லுங்க பார்ப்போம்? இதற்கான விடையை சரியாக கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் ஒரு ஜீனியஸ்தான். இந்த புதிரை உங்கள் நண்பர்கள் & உறவினர்களுக்கு பகிர்ந்து அவர்களையும் கண்டுபிடிக்க சொல்லுங்கள். அப்புறம் என்ன.. ஆரம்பிக்கலாங்களா?


