News April 1, 2025
‘Money heist’ பார்த்து கொள்ளை – சிக்கிய கும்பல்…!

கர்நாடகாவில் வங்கிக் கொள்ளை வழக்கில் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலம் போலீஸை அதிர வைத்துள்ளது. 2024-ல் SBI வங்கியில் 17 கிலோ தங்க நகைகளை சுருட்டிய வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், Money heist உள்ளிட்ட சீரிஸ் பார்த்து கொள்ளையடிக்க பயிற்சி பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கிணற்றில் மறைத்து வைத்திருந்த அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
Similar News
News November 18, 2025
டெல்லி ஐகோர்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் 4 நீதிமன்றங்கள், CRPF வீரர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சாகேத், பாட்டியாலாவில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கடந்த 10-ம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானது கவனிக்கத்தக்கது.
News November 18, 2025
டெல்லி ஐகோர்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் 4 நீதிமன்றங்கள், CRPF வீரர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சாகேத், பாட்டியாலாவில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கடந்த 10-ம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானது கவனிக்கத்தக்கது.
News November 18, 2025
BREAKING: கோவையில் PM மோடியை சந்திக்கிறார் EPS

நாளை கோவை வரும் PM மோடியை, EPS சந்தித்து பேசுகிறார். கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் PM மோடி பங்கேற்க உள்ளார். முன்னதாக, விமான நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் PM மோடியை சந்தித்து EPS பேச உள்ளார். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம், TN-ல் NDA கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.


