News May 7, 2025
காந்தியின் பொன்மொழிகள்

*ஒருவன் தாம் மேற்கொள்ளும் செயலின் முடிவை அறிந்துகொள்வதில் கவலையாக இருந்தால், அவனுக்கு தடைகளும் எதிர்ப்புகளும்தான் அதிகம் தென்படும். *ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ அப்போதே அவன் மேதையாகிறான். *மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகிவிட முடியாது. *தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.
Similar News
News December 5, 2025
USA-ல் இருந்து 3,258 இந்தியர்கள் நாடு கடத்தல்: ஜெய்சங்கர்

USA-ல் இருந்து, இந்தாண்டு இதுவரை 3,258 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த அவர், 2009 முதல் இதுவரை மொத்தம் 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், நாடு கடத்தப்பட்டவர்களை விலங்கிட்டு அழைத்து வருவது குறித்து அமெரிக்காவிடம் இந்தியாவின் கவலையை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News December 5, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹4,000 குறைந்தது

கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த வெள்ளியின் விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. நேற்று(டிச.04) பார் வெள்ளி 1 கிலோவுக்கு ₹1,000 குறைந்த நிலையில், இன்று(டிச.05) மேலும் ₹4,000 குறைந்து ₹1,96,000-க்கு விற்பனையாகிறது. சில்லறை விலையில் ₹1 கிராம் வெள்ளி ₹196-க்கு விற்பனையாகிறது.
News December 5, 2025
உங்கள் காரால் உயிருக்கே ஆபத்து.. BIG ALERT!

புதிய காரில் ஒருவிதமான ஸ்மெல் வருவது வழக்கமே என அலட்சியமாக இருக்கவேண்டாம். இது உயிரைக்கொல்லும் Slow poison என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். புதிய காரில் உள்ள பிளாஸ்டிக் கவர், ஷீட்களில் ethylbenzene, formaldehyde, toluene போன்ற கெமிக்கல்கள் இருக்கும். இது வெயிலில்படும் போது ஒருவிதமான ஸ்மெல் வரும். இதனை நீங்கள் சுவாசித்தால் தலைசுற்றல், வாந்தியில் தொடங்கி கேன்சர் கூட வரக்கூடும் என்கின்றனர். SHARE.


