News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

Similar News

News December 25, 2025

பொங்கல் பரிசுத்தொகை.. வந்தது இனிப்பான செய்தி

image

2021 தேர்தலின்போது, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, பொங்கல் பரிசாக ₹2,500 அளித்தது. இதை முறியடிக்கும் வகையில் ₹3,000 வழங்க திமுக அரசு திட்டமிட்டு, அதில் உறுதியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகை பற்றி புத்தாண்டு தினத்தன்று CM ஸ்டாலின் அறிவிப்பார் எனவும், தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் டோக்கன் விநியோகம் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News December 25, 2025

ரஜினி படத்தில் பாலிவுட் பாட்ஷா!

image

‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக சமீபத்தில் தகவல் பரவிய நிலையில், தற்போது அது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேட்டியளித்துள்ள பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, தான் உள்பட பல சீனியர் நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார். அதில் ஷாருக்கான், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

News December 25, 2025

BREAKING: முதற்கட்டமாக 1,000.. அமைச்சர் அறிவித்தார்

image

1,000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால், 7 நாள்களாக நடைபெற்று வந்த MRB செவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து பேசிய <<18651286>>செவிலியர்கள் ஒரு வாரமாக கைது,<<>> தொல்லை என சித்திரவதையை அனுபவித்ததாகவும், மொத்தமுள்ள 8,322 ஒப்பந்த செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்யும் வரை தங்களது முழக்கம் தொடரும் என்றும் கூறினர்.

error: Content is protected !!