News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

Similar News

News November 19, 2025

இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும் : PM மோடி

image

இயற்கை விவசாயத்தின் பாதையில் இந்தியா பயணித்தே ஆக வேண்டும் என்று PM மோடி வலியுறுத்தியுள்ளார். ரசாயனம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட PM மோடி, அதை சரிசெய்வதற்கு இயற்கை விவசாயம் மட்டுமே தீர்வு என்றும் கூறியுள்ளார். மேலும், வேளாண் உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பால் விவசாயிகளுக்கு அதிக ஆதாயம் கிடைத்திருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

News November 19, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

image

இந்த மாதம் அரசு விடுமுறையே இல்லாத நிலையில், அடுத்த மாதம் மொத்தமாக அரையாண்டு விடுமுறை வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. டிச.10 – 23- வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, டிச.24 – ஜன.4 வரை 12 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். அனைத்து வகுப்புகளுக்கும் <<18304177>>தேர்வு<<>> <<18304103>>அட்டவணைகள்<<>> ஏற்கெனவே <<18304206>>வெளியாகியுள்ளது<<>> குறிப்பிடத்தக்கது.

News November 19, 2025

இந்த மாதிரி எலுமிச்சை பார்த்திருக்கீங்களா?

image

எலுமிச்சை, இந்தியாவில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதோடு, உற்பத்தியாளர்களுக்கு நல்ல வருமானத்தைத் தருகிறது. இந்த எலுமிச்சையில் பல வகைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? சில வகைகளை பார்க்கும்போது, இப்படியெல்லாம் எலுமிச்சை இருக்கிறதா என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!