News August 14, 2024
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
Similar News
News December 2, 2025
டிட்வா புயல்.. இலங்கைக்கு தோள் கொடுத்த இந்தியா

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 53 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சாகர்பந்துவின் ஒரு பகுதியாக Chetak, MI-17 ஹெலிகாப்டர்கள் இலங்கை விமானப்படையுடன் இணைந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. பல நாடுகளை சேர்ந்த 150-க்கும் பேரை மீட்க இந்தியா உதவியுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
News December 2, 2025
தங்கம் விலை குறைந்தது!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக சரிவை சந்தித்து வருகிறது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $6.62 குறைந்து $4,212-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி 1 அவுன்ஸ் $0.07 உயர்ந்து $56.79 ஆக உள்ளது. இந்திய சந்தையில் நேற்று, தங்கம் சவரனுக்கு ₹96,560-க்கு விற்பனையானது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் விலை குறைவால் இன்று நம்மூரிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
News December 2, 2025
தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் காங்.,

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்தி வரும் திமுக, மறுபுறம் தொகுதிப் பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட காங்., கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு, நாளை மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளது. எவ்வளவு தொகுதிகள், என்னென்ன தொகுதிகள் என்பதை இறுதி செய்ய, காங்., தீவிரமாக இறங்கியுள்ளது.


