News August 14, 2024
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
Similar News
News January 12, 2026
யாருடன் கூட்டணி; எஸ்டிபிஐ சூசகம்

அதிமுகவுடன் எஸ்டிபிஐ கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், யாருடன் கூட்டணி என்பதை மாநிலக் குழு முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் என்று எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மக்களுக்காக யார் உழைப்பதற்கு வந்தாலும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக சூசகமாக கூறிய அவர், ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
News January 12, 2026
டிரம்ப்பை திசை திருப்பும் அமெரிக்க தளபதிகள்!

கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் டிரம்ப், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிறப்பு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், டிரம்ப்பின் முடிவு சட்டவிரோதமானது, பைத்தியக்காரத்தனமானது என USA ராணுவ தளபதிகள் தெரிவித்துள்ளதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, டிரம்ப்பை திசை திருப்பும் வகையில் ஈரானுடன் சண்டையிடலாம், ரஷ்ய கப்பல்களை பிடிக்கலாம் என தளபதிகள் சொல்கிறார்களாம்.
News January 12, 2026
Paid ரிவ்யூக்களுக்கு செக் வைத்த கோர்ட்!

BookMyShow, District போன்ற ஆப்களில் டிக்கெட் புக் செய்யும் போதே படத்திற்கான ரேட்டிங், ரிவ்யூ தெரியும். இவற்றில் பல Paid ரிவ்யூக்கள் என்பதால், அது படங்களை கடுமையாக பாதிக்கிறது. இந்நிலையில், சிரஞ்சீவியின் ‘மன சங்கரவரபிரசாத் காரு’ படத்திற்கு, இப்படி ரிவ்யூ & ரேட்டிங் போடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்க வேண்டிய முடிவு என திரைத்துறையினர் பாராட்டுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?


