News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

Similar News

News December 25, 2025

அதிமுகவின் அடிமடியில் கைவைக்கிறதா பாஜக?

image

TN-ல் இம்முறை குறைந்தபட்சம் 15 இடங்களையாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது பாஜக. இதற்காக அதிமுகவின் சிட்டிங் தொகுதிகளை (20) அக்கட்சி குறிவைத்திருக்கிறதாம். குறிப்பாக, மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், கோவை வடக்கு, சிங்காநல்லூர் & திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக – பாஜக சீட் பஞ்சாயத்து சூடுபிடித்துள்ளது.

News December 25, 2025

ஜெலென்ஸ்கியின் புதிய திட்டம்: முடிவுக்கு வருமா போர்?

image

உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர, ஜெலென்ஸ்கி 20 அம்ச அமைதி திட்டத்தை முன்வைத்துள்ளார். USA உடன் இணைந்து உருவாக்கிய இந்த திட்டத்தில், நேட்டோ நாடுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உத்தரவாதத்தை உக்ரைன் கோரியுள்ளது. டான்பாஸ் பகுதியில் சுதந்திர பொருளாதார மண்டலம், மறுசீரமைப்புக்கு நிதி உள்ளிட்டவையும் திட்டத்தில் கோரப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டம் புடினின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

News December 25, 2025

களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் (PHOTOS)

image

இறை பாலகன் இயேசுவின் பிறப்பை கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தேவாலயங்கள் மின்விளக்குகளால் ஜொலிக்க, சிறப்பு பிரார்த்தனைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். சாண்டா கிளாஸ்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான பரிசுகளை வழங்கி வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர். உலகெங்கும் களைகட்டியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சில பிரத்யேக புகைப்படங்களை மேலே SWIPE செய்து பாருங்க..

error: Content is protected !!