News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

Similar News

News November 25, 2025

600 முறை மரணத்தை ஏமாற்றிய லெஜண்ட் காஸ்ட்ரோ!

image

கியூப புரட்சியாளரும், முன்னாள் கியூப அதிபருமான பிடல் காஸ்ட்ரோ மறைந்த நாள் இன்று. அவரை கொல்ல அமெரிக்கா 600 முறை முயற்சித்துள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். ஆனால் அந்த 600 சதி திட்டங்களையும் தகர்த்தெறிந்து 90 வயது வரை வாழ்ந்தவர் பிடல் காஸ்ட்ரோ. 2016-ம் ஆண்டு நவ.25-ம் தேதி வயது மூப்பின் காரணமாகவே அவர் காலமானார். இன்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஐகான்களில் ஒருவராக திகழ்கிறார்.

News November 25, 2025

இதுதான் ராமர் கோயிலில் ஏற்றப்படும் கொடி!

image

அயோத்தி ராமர் கோயிலில் PM மோடி ஏற்றி வைக்கும் கொடியின் முதல்கட்ட படங்கள் வெளியாகி உள்ளன. செங்கோண முக்கோண வடிவில் 20 அடி நீளம், 10 அடி அகலத்தில் இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடியானது ராமரின் சக்தியையும், வீரத்தையும் குறிக்கும் வகையில், சூரியனின் உருவத்தை கொண்டுள்ளது. மேலும், ‘ஓம்’ மற்றும் கோவிதர் மரமும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2025

BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் ராமதாஸ்

image

2026 தேர்தல் கூட்டணி குறித்து டிச.30-ல் நடக்கும் பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மகள் காந்திமதி உள்பட முக்கிய நிர்வாகிகளை அழைத்து தைலாபுரத்தில் அவர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே பாமகவை ஒன்றிணைத்து கூட்டணியில் சேர்க்க பாஜக முற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, ராமதாஸும் NDA கூட்டணியையே தேர்ந்தெடுப்பார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

error: Content is protected !!