News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

Similar News

News November 25, 2025

விளையாட்டில் வீறுநடைபோடும் இந்திய சிங்கப்பெண்கள்..

image

நவம்பர் மாதத்தில், இந்திய வீராங்கனைகள் வெற்றிக் கோப்பைகளை அடுத்தடுத்து வென்று வருவது, நாட்டின் விளையாட்டு வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நவ.2-ல் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி தட்டியது. தொடர்ந்து, நவ.23-ல் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி கெத்தாக தனதாக்கியது. அதற்கு அடுத்த நாளே (நவ.24) கபடி மகளிர் உலகக்கோப்பையையும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

News November 25, 2025

நாங்கள் மடசாம்பிராணியாக இருக்கிறோம்: செல்லூர் ராஜு

image

மதுரையில் நடைபெற்று வரும் SIR பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம் என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். SIR பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பலருக்கு, அதனை அப்லோட் செய்வது எப்படி என தெரியவில்லை, சிலருக்கு Internet வசதி இல்லை, சிலருக்கு அதற்கேற்ப மொபைல் போன் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி இருந்தால், SIR-ன் நோக்கம் நிறைவேறாது என்றும் கூறினார்.

News November 25, 2025

திரைப்பட விழாவில் கெத்து காட்டும் பாட்ஷா

image

‘ஐயா என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரும் இருக்கு’ என்று பேசும் ரஜினியின் முகத்தில் தெரியும் மாஸே வேற லெவல் தான். அப்படிப்பட்ட ‘பாட்ஷா’ படம், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இவ்விழாவில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் கெளரவிக்கப்படவுள்ள நிலையில், இத்திரையிடலும் அதில் இடம்பெற்றுள்ளது. பாட்ஷாவில் உங்களுக்கு பிடித்த சீன் எது?

error: Content is protected !!