News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

Similar News

News December 17, 2025

மாணவன் உயிரிழப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

image

<<18580609>>திருவள்ளூர்<<>> பள்ளி மாணவன் உயிரிழப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார். அதில், பள்ளியில் அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் குற்றம் செய்ததாகத்தான் அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார். FIR பதிவு செய்துள்ளதாக கூறிய அவர், நிதியுதவி மட்டுமின்றி குடும்பத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார். CM இதுபற்றி விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

News December 17, 2025

520 பெண்களுடன் கணவர்.. மனைவியின் விநோத செயல்!

image

ஜப்பான் பெண்ணுக்கு, அரிய வகை நோயுடன் மகன் பிறக்க, கணவன் துணையுடன் அதை வெல்ல நினைக்கிறார். அப்போது தான், கணவர் 520 பெண்களுடன் முறை தவறி பழகி வருவது தெரியவருகிறது. முதலில் பழிவாங்க எண்ணினாலும், மகனின் நிலை கண்டு நூதன முடிவை எடுத்தார். கணவனை பிரிந்து, அவரின் முறையற்ற உறவுகளை Comics புக்காக வெளியிட்டுள்ளார். இதன்மூலம் கோபத்தை தணித்து கொண்டது மட்டுமின்றி, மகன் சிகிச்சைக்கும் பணம் சேர்த்துள்ளார்.

News December 17, 2025

தவெகவில் இணைந்தனர்.. கொங்குவில் அடுத்த விக்கெட்

image

செங்கோட்டையன் வருகைக்கு பிறகு, திமுக, அதிமுகவுக்கு போட்டியாக கொங்கு மண்டலத்தை தவெக வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமமுக பொதுக்குழு உறுப்பினர் கோவை நாகு உள்பட அமமுகவினர், புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். ஈரோட்டில் நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போதும், மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!