News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

Similar News

News December 15, 2025

ஜாக் மாவின் பொன்மொழிகள்

image

✪ கனவுகளின் அழகை நம்புகிறவர்களுக்கு தான் எதிர்காலம் சொந்தம் ✪ ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு ✪ உலகை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் வித்தியாசமானவராக இருக்க வேண்டும் ✪ யோசனைகள் எதுவென்பது முக்கியமல்ல; அவற்றை செயல்படுத்துவதுதான் கெட்டிக்காரத்தனம் ✪ உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதைப் பிடித்துக்கொண்டு ஒருபோதும் விடக்கூடாது.

News December 15, 2025

தமிழகத்தில் பொங்கலை கொண்டாட உள்ளாரா PM மோடி

image

ஜனவரி 13 முதல் 15-ம் தேதி வரை 3 நாள்களுக்கு தமிழகத்தில் PM மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள அவர், ஜன.14-ம் தேதி விவசாயிகளுடன் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ உள்ளாராம். தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து PM மோடி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News December 15, 2025

குளிர்கால ஆரோக்கியத்துக்கு இது முக்கியம் மக்களே!

image

வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் நாம் நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவது வழக்கம். இதனால் ஆரஞ்சு, நெல்லிக்காய், திராட்சை உள்ளிட்ட வைட்டமின் C நிறைந்த உணவுகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர்காலத்தில் நீராவி குளியல் எடுப்பது, வியர்வையை வெளியேற்றவும், தசைகளை தளர செய்யவும் உதவுமாம். அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!