News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

Similar News

News December 6, 2025

அவர்களின் இலக்கு நேரு அல்ல: சோனியா காந்தி

image

சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பையும் செய்யாதவர்கள், நேருவை நாட்டின் எதிரியாக கட்டமைக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக சோனியா காந்தி சாடியுள்ளார். நேருவை வரலாற்றில் இருந்து நீக்குவது அவர்களது முக்கிய இலக்கு அல்ல. அவர் ஏற்படுத்திய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளை சிதைப்பதுதான் இலக்கு. நேருவை ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பது என்பது வேறு, இது வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 6, 2025

பாடங்களுடன் கலையையும் கற்பிக்க வேண்டும்: அன்புமணி

image

<>+2 மாணவர் கொலையை சுட்டிகாட்டி<<>>, மாணவர் சமுதாயம் எங்கே போகிறது என்ற கேள்வியை அன்புமணி முன் வைத்துள்ளார். ஆசிரியர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருப்பதும் இதுபோன்ற நிகழ்வுக்கு காரணம் எனவும், இது மாணவர்கள் நலனுக்கும் உதவி செய்யாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கவனச் சிதறல்களைத் தடுக்க பாடங்களுடன் பிற கலைகளும் கற்பிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News December 6, 2025

திங்கள்கிழமை பள்ளிகள் இங்கு விடுமுறை

image

ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி, டிச.8-ம் தேதி (திங்கள்கிழமை) காஞ்சிபுரம் மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்நாளில், அங்குள்ள 113 பள்ளிகள் செயல்படாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தமிழகத்தில் டிச.12 வரை மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. மழைப்பொழிவை பொறுத்து பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!