News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

Similar News

News December 24, 2025

400 காலிப்பணியிடங்கள்.. உடனே முந்துங்க

image

மத்திய அரசு நிறுவனமான RITES-ல் காலியாக உள்ள 400 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. இதற்கு BE, B.Tech, B.Pharm டிகிரி படிப்புடன் குறைந்தபட்ச பணி அனுபவமும் தேவை. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளமாக ₹42,478 வழங்கப்படும். <>https://rites.com<<>> என்ற தளத்தில் விண்ணப்பியுங்கள். SHARE IT

News December 24, 2025

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு.. அமைச்சர் அறிவிப்பு

image

<<18653603>>ஜன.6-ம் தேதிக்குள்<<>> பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி அறிவித்தார். அதாவது, டிச.15-ம் தேதியே மொத்த வேட்டி, சேலைகளையும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, வேட்டி, சேலை விநியோக பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. SHARE IT

News December 24, 2025

23 தொகுதிகள் என்பது வதந்தி: தமிழிசை

image

MGR நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழிசை செளந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர், அதிமுக-பாஜக கூட்டணிக்கு MGR-ன் ஆசிர்வாதம் உள்ளதாக தெரிவித்தார். MGR எதிர்த்த திமுகவை தோற்கடிக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கூறிய அவர், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!