News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

Similar News

News August 13, 2025

BREAKING: வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்

image

ICICI வங்கியை தொடர்ந்து HDFC வங்கியும் மாதாந்திர மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஆக.1 முதல் கணக்கு தொடங்கியவர்களுக்கு நகர்ப்புற சேமிப்பு கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் ₹10,000-லிருந்து ₹25,000-மாகவும், ஊரகப் பகுதிகளில் இந்த தொகை ₹10,000-மாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பள மற்றும் BSBDA கணக்குகளுக்கு இந்த மாற்றம் பொருந்தாது. பழைய வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

News August 13, 2025

ALERT: நைட் ஷிப்ட் வேலையில் இவ்வளவு ஆபத்தா!

image

நைட் ஷிப்ட் (அ) சுழற்சி ஷிப்ட் முறையில் வேலை செய்பவர்களுக்கு இதய-ரத்தநாள நோய், புற்றுநோய், உடல்பருமன், நீரிழிவு (சர்க்கரை), மனச்சோர்வு, தீவிர ஜீரண கோளாறுகள், குழந்தையின்மை பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. நைட் ஷிப்ட் பணியால் உடல் சோர்வு அடைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தூக்கமின்மை, ஹார்மோன் சமநிலை பாதிப்பு, விபத்துகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

News August 13, 2025

திமுகவில் இணைகிறாரா தங்கமணி? பரபரப்பு அறிக்கை

image

EPS-ன் நம்பிக்கைக்குரியவராக திகழும் தங்கமணி, அதிமுகவில் இருந்து விலக இருப்பதாகவும், அவர் திமுகவில் இணையவிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட தங்கமணி, தனது உயிர் மூச்சு இருக்கும்வரை அதிமுகவில்தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார். தான் செத்தாலும் உடலில் அதிமுக கொடியைத் தான் போர்த்த வேண்டும் என அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!