News August 14, 2024
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
Similar News
News December 20, 2025
சின்ன கால்குலேஷன் மிஸ்டேக்: நயினார்

திமுக என்றுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது இல்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அன்று முதல் இன்று வரை அதிமுக உடைந்ததால்தான் திமுக வெற்றிபெற்றது என்ற அவர், சென்ற தேர்தலிலும் சின்ன கால்குலேஷன் மிஸ்டேக்கால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டதாக கூறியுள்ளார். அப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது ₹50,000 கோடி வரை கொள்ளையடித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News December 20, 2025
செல்போன் ரீசார்ஜ்.. அதிரடி ஆஃபர்

வாடிக்கையாளர்களுக்கு சமீப காலமாக BSNL நிறுவனம் ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. அந்த வகையில், ₹1-ல் ஒரு மாதத்தை சமாளிக்கும் ஆஃபர் ஜன.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிதாக சிம் வாங்குபவர்கள் ₹1 பிளானில் 30 நாள்களுக்கு தினமும் 2 GB டேட்டா, 100 SMS, அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் பொருந்தும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுகவும்.
News December 20, 2025
அகண்டா 3-ல் சூப்பர் ஹீரோஸ்!

பாலையா நடிப்பில் வெளியான அகண்டா 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பட வெற்றிவிழாவில் பேசிய இயக்குநர் போயபதி, நான் வேறு சில படங்களை முடித்த பிறகு அகண்டா 3 பற்றி யோசிப்பேன். அவெஞ்சர்ஸ் சீரிஸ் போல அகண்டா வர வாய்ப்புள்ளது. அவெஞ்சர்ஸ் கற்பனை சூப்பர் ஹீரோக்கள், ஆனால் நம் புராணங்களில் உண்மையான சூப்பர் ஹீரோக்கள் உள்ளனர். அவர்களை அகண்டாவில் கொண்டு வரலாம் எனத் தெரிவித்துள்ளார்.


