News August 14, 2024
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
Similar News
News November 21, 2025
SA tour of India: தெ.ஆப்பிரிக்க ODI, T20 Squad அறிவிப்பு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தெ.ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட், 3 ODI, 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் தெ.ஆப்பிரிக்கா வென்ற நிலையில், 2-வது டெஸ்ட் நாளை கவுஹாத்தியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ODI & T20 போட்டிகளுக்கான அணியினை தெ.ஆப்பிரிக்கா அறிவித்துள்ளது. ODI போட்டிகளை டெம்பா பவுமா தலைமையிலும், T20 போட்டிகளை எய்டன் மார்க்ரம் தலைமையிலும் விளையாடவுள்ளது.
News November 21, 2025
BREAKING: விஜய்க்கு பிரேமலதா ஆதரவு.. திடீர் திருப்பம்

நேற்று முளைத்த <<18343358>>காளான்கள்<<>> எல்லாம் CM ஆக ஆசைப்படுவதாக பிரேமலதா கூறியது விஜய்யை தான் என கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, தான் கூறியது விஜய்யை அல்ல என பிரேமலதா விளக்கமளித்துள்ளார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை தாங்கள் (தேமுதிக) கூத்தாடி என கூறவில்லை எனவும் விஜய்க்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக – தேமுதிக கூட்டணி உருவாகுமா?
News November 21, 2025
டைட்டானிக் கம்மலை நினைவிருக்கிறதா?

காதோரமாய் கன்னங்களை உரசும் சிறு முடிகளுக்கு மத்தியில் கம்மல் நடனமாடுவதை ரசிப்பதே தனி அழகு. அதிலும், சற்று தலையை திருப்பும்போது கம்மல் நடனமாடினால் அது பேரழகாக இருக்கும். அந்த பேரழகை அளித்து, பெண்களை மேலும் அழகாக்கியது தான் ‘டைட்டானிக் கம்மல்’. சற்று நீண்ட செயினின் இறுதியில் மிளிரும் கல்லைக் கொண்ட இந்த கம்மலை ரசிக்காதவர்களே கிடையாது. டைட்டானிக் கம்மலை பார்த்ததும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?


