News August 14, 2024
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
Similar News
News November 21, 2025
தமிழக விரோத நிலைப்பாட்டில் பாஜக: திருமாவளவன்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்புக்கு BJP-ன் தமிழக விரோத நிலைப்பாடே காரணம் என்று திருமாவளவன் சாடியுள்ளார். 2011 மக்கள் தொகை விவரங்களை காட்டி திட்டத்தை நிராகரிப்பது சரியானது அல்ல என்றும், அங்கு கடந்த 14 ஆண்டுகளில் மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். BJP ஆளும் மாநிலங்களில் சிறிய ஊர்களுக்கு கூட மெட்ரோ ரயில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 21, 2025
BREAKING: நண்பர் அதிரடி கைது.. நடிகர் சிம்பு அதிர்ச்சி

போதைப்பொருள் வழக்கில் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரும், Ex உதவியாளருமான சர்புதீன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்களில் சர்புதீனும் ஒருவர். ஏற்கெனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நண்பர் கைதால் சிம்பு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
News November 21, 2025
EPS-ன் ஆட்சியில் கோவைக்கு மெட்ரோ உறுதி: வானதி

EPS முதல்வரானவுடன் கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று வானதி சீனிவாசன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தற்போது நிராகரிக்கப்பட்டுள்ள மெட்ரோ திட்டத்தினை, வரையறைகளுக்கு உட்பட்டு மாற்றி அமைத்து மத்திய அரசிடம் அனுமதி பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடி தமிழகத்திற்கு எதிராக இருப்பது போல நடத்தப்படும் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.


