News August 14, 2024
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
Similar News
News December 20, 2025
தனியார் பள்ளிகளில் வரும் மாற்றம்.. அரசு புதிய அறிவிப்பு

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும் எனவும் தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண்ணை மாணவர்களே பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கி மூலம் பாடல்களை ஒலிப்பரப்பக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை என்பதால் திங்கள் முதல் இது நடைமுறைக்கு வரும் என வாய்ப்புள்ளது.
News December 20, 2025
இந்தியாவை ரிஷிகள்தான் உருவாக்கினார்கள்: RN ரவி

வடமாநிலங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி தென் மாநிலத்தவர்கள் குறைவாக தெரிந்துவைத்துள்ளனர் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். ‘தமிழ் கற்கலாம்’ நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழை கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்திய அவர், மொழியால் மக்களுக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவை அரசர்கள் உருவாக்கவில்லை எனவும் ரிஷிகள்தான் உருவாக்கினார்கள் என்றும் பேசியுள்ளார்.
News December 20, 2025
உங்களுக்கு இரண்டு இதயம் இருக்கு தெரியுமா?

கெண்டைக்கால் தசைகள், குறிப்பாக சோலியஸ் தசை தான் நமது உடலில் உள்ள 2-வது இதயம் என அழைக்கப்படுகிறது. இதயத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரத்தம், புவி ஈர்ப்பு விசையால் கால்களில் தேங்கிவிடாமல் உடல் முழுக்க சீராக அனுப்பும் பணியை இது செய்கிறது. இதனால், இதயத்தின் வேலைப்பளு குறைவதோடு, அதன் ஆயுளும் நீள்கிறது. எனவே, இந்த 2ம் இதயம் சீராக இயங்க உடற்பயிற்சி செய்வது அவசியமாகிறது. SHARE.


