News March 17, 2024
தேர்தல் பத்திரம் மூலம் நிதி வாங்கவில்லை

தேர்தல் பத்திரங்கள் மூலமாக எந்த நிறுவனத்திடம் இருந்தும் நிதியுதவி பெறவில்லை என தேமுதிக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தேர்தல் பத்திரங்கள் எதையும் வாங்கவில்லை எனக் கூறியுள்ளார்.
Similar News
News December 5, 2025
விழுப்புரம் முழுவதும் போலீசார் திடீர் சோதனை!

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் & விக்கிரவாண்டி ஆகிய உட்கோட்டங்களில் இன்று (டிச.5) மறைமுக நாசவேலை தடுப்பு பிரிவினர், காவலர்கள் & மோப்பநாய் ராணி உதவியுடன். பின் பொதுமக்கள் அதிகம் போடக்கூடிய இடங்கள், நகர்ப்புற முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், இது நாளை டிச.6(பாபர் மசூதி விவகாரம்) தினத்தை முன்னிட்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
News December 5, 2025
குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறாங்களா?

குழந்தைகள் சாப்பிடமாட்டேன் என அடம்பிடித்தால் உடனே அவர்களுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்காதீர்கள். அவர்கள் ஒருவேளை சாப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதைதான் அவர்களும் சாப்பிடணும் என சொல்லுங்கள். இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் போனால், நாளடைவில் அவர்கள் அனைத்திற்கும் அடம்பிடிப்பார்கள் என குழந்தைகள் நல டாக்டர்கள் சொல்கின்றனர். எனவே குழந்தைகளை அப்படி வளர்க்காதீங்க. SHARE.
News December 5, 2025
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. மத்திய அரசு முடிவு

மக்களின் துல்லியமான லொகேஷனை (A-GPS) எப்போதும் On செய்து வைத்திருப்பதை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, டவர் சிக்னல் படி தோராயமான லொகேஷனையே பெற முடிவதால், புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் தொய்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இது மக்களின் தனியுரிமையை பாதிக்கும் என ஆப்பிள், கூகுள், சாம்சங் நிறுவனங்கள் எதிர்க்கின்றன.


