News April 7, 2025

5ஆம் வகுப்பு வரை இன்று முழு ஆண்டு தேர்வு தொடக்கம்

image

கோடை வெயில் காரணமாக, 1 – 5 ஆம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, 1,2,3ஆம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 4,5ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் தமிழ் உட்பட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறவுள்ளன. 1-3ஆம் வகுப்புக்கு ஏப்.12ஆம் தேதியும், 4-5ஆம் வகுப்பு ஏப்.18ஆம் தேதியும் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.

Similar News

News April 9, 2025

மக்களே, இவர்களை தவிருங்கள்

image

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க, இந்த குணங்கள் கொண்டவர்களை தவிருங்கள்:
1. உங்களிடம் பொய் சொல்பவர்கள்
2. உங்களை அவமதிப்பவர்கள் / மரியாதை கொடுக்காதவர்கள்
3. உங்களை தம் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள்
4. உங்களின் தன்னம்பிக்கையை கெடுப்பவர்கள் / தலைகுனிய செய்பவர்கள்.
இதை செய்தாலே, உங்களுக்கு நல்ல காலம் தான். வேறு எந்த மாதிரி நபர்களை தவிர்க்க வேண்டும்? உங்கள் அனுபவத்தில் இருந்து சொல்லுங்களேன்.

News April 9, 2025

இது தேவையா? தொண்டையில் மீன் சிக்கி இளைஞர் மரணம்

image

சென்னை மதுராந்தகம் அருகே தொண்டையில் மீன் சிக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 29 வயதான மணிகண்டன் அங்குள்ள ஏரியில் கைகளால் மீன்பிடித்தார். அப்போது 2 மீன்கள் சிக்கவே, அதில் ஒரு மீனை தனது வாயில் வைத்தபடி இன்னொரு மீனை கைகளில் பிடித்துக்கொண்டார். இதில் வாயில் இருந்த மீன் நழுவி தொண்டையில் போய் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

News April 9, 2025

நீட் விலக்கு பெறும் நம்பிக்கை வந்திருக்கிறது: முதல்வர்

image

மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் சிதைப்பதாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநர் அரசியல் செய்ததாகத் தெரிவித்துள்ளார். ஆனால், ஆளுநரின் அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

error: Content is protected !!