News April 7, 2025
5ஆம் வகுப்பு வரை இன்று முழு ஆண்டு தேர்வு தொடக்கம்

கோடை வெயில் காரணமாக, 1 – 5 ஆம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, 1,2,3ஆம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 4,5ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் தமிழ் உட்பட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறவுள்ளன. 1-3ஆம் வகுப்புக்கு ஏப்.12ஆம் தேதியும், 4-5ஆம் வகுப்பு ஏப்.18ஆம் தேதியும் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.
Similar News
News December 21, 2025
‘VB-G RAM G’ மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்

100 நாள் வேலைத்திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக கொண்டு வரப்பட்ட ‘VB-G RAM G’ மசோதாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் ஏற்படும் மாற்றங்கள்: *இனி 125 நாள்கள் வேலை உறுதி செய்யப்படும். *இந்த திட்டத்திற்கு முன்பு மத்திய அரசு 90% நிதி ஒதுக்கிய நிலையில், தற்போது மத்திய அரசு 60%, மாநில அரசுகள் 40% நிதி ஒதுக்கும். *MGNREGA திட்டத்தில் உள்ள காந்தி பெயர் மாற்றப்படும்.
News December 21, 2025
தனியார் பள்ளிகளில் வரப்போகும் மாற்றம்..!

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும் எனவும் தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண்ணை மாணவர்களே பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கி மூலம் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை என்பதால் நாளை முதல் இது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. மாணவர்களே, ரெடியா?
News December 21, 2025
மெகா வெற்றியை நோக்கி முன்னேறும் பாஜக கூட்டணி

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மெகா வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 246 நகராட்சி மற்றும் 42 நகர பஞ்சாயத்துகளுக்கான தேர்தலில் மகாயுதி 214, காங்., தலைமையிலான மகா விகாஸ் அகாடி 52 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அடுத்த மாதம் பிரஹன் மும்பை மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


