News April 7, 2025
5ஆம் வகுப்பு வரை இன்று முழு ஆண்டு தேர்வு தொடக்கம்

கோடை வெயில் காரணமாக, 1 – 5 ஆம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, 1,2,3ஆம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 4,5ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் தமிழ் உட்பட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறவுள்ளன. 1-3ஆம் வகுப்புக்கு ஏப்.12ஆம் தேதியும், 4-5ஆம் வகுப்பு ஏப்.18ஆம் தேதியும் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.
Similar News
News December 23, 2025
EPS பேச்சை பாஜக மதிக்கவில்லை: CM ஸ்டாலின்

MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, EPS பொய்சொல்லி வருகிறார் என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பாஜக அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாள்கள் வேலை தரப்போகிறதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என வலிக்காமல் EPS கொடுத்த அழுத்தத்தை, பாஜக மதிக்கவில்லை எனவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.
News December 23, 2025
BREAKING: நாடு முழுவதும் பாமாயில் விலை குறைகிறது!

இந்தியாவில் சமையலுக்கு பாமாயில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இச்சூழலில், உலக சந்தையில் பாமாயிலின் விலை கணிசமாக குறைந்துள்ளது. சோயா எண்ணெய்யை விட டன்னுக்கு $100, சூரியகாந்தி எண்ணெய்யை விட டன்னுக்கு $200 குறைவாகவும் உள்ளது. அதேபோல் இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் விளைச்சல் அதிகரித்திருக்கிறது. இதனால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவில் எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 23, 2025
அதிமுக, பாஜகவின் வியூகம்.. EPS விளக்கம்

2026 தேர்தல் வியூகங்கள் குறித்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன், EPS ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த EPS, தங்கள் கூட்டணி தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற திட்டங்கள் குறித்து முதற்கட்டமாக ஆலோசித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், திமுக ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்புடன் உள்ளதால் அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.


