News April 7, 2025
5ஆம் வகுப்பு வரை இன்று முழு ஆண்டு தேர்வு தொடக்கம்

கோடை வெயில் காரணமாக, 1 – 5 ஆம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, 1,2,3ஆம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 4,5ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் தமிழ் உட்பட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறவுள்ளன. 1-3ஆம் வகுப்புக்கு ஏப்.12ஆம் தேதியும், 4-5ஆம் வகுப்பு ஏப்.18ஆம் தேதியும் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.
Similar News
News December 29, 2025
பொங்கல் பரிசு பணம்.. அரசு தரப்பு வெளியிட்டது

<<18690697>>பொங்கல் பரிசுத் தொகுப்பு <<>>வரும் 10-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி கூறியிருந்தார். அத்துடன் ₹3,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்த நிலையில், வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. அதேநேரம் பொங்கல் பண்டிகை செலவுகளை கருதி, உரிமைத் தொகை ₹1,000-ஐ ஜன.9 (அ) 12-ம் தேதியே வங்கிக்கணக்கில் செலுத்த வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News December 29, 2025
மார்கழி திங்கள் ஸ்பெஷல் கோலங்கள்!

யோகா போல, கோலம் போடுவதும் உடல்நலன் காக்கும் கலைதான். குனிந்து, வளைந்து, அமர்ந்து கோலம் போடுவது ஆசனம் செய்வது போல்தான் இருக்கும். அதிகாலையில் எழுந்து கோலம் போட்டால், அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில், மார்கழி திங்களன்று வீட்டு வாசலில் போடக்கூடிய கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். Swipe செய்து பார்த்து அவற்றை வீட்டில் முயற்சிக்கவும்.
News December 29, 2025
அதிக கடனில் தமிழகம்.. புயலை கிளப்பிய காங். நிர்வாகி

இந்தியாவிலேயே TN தான் அதிக நிலுவைக்கடன் வைத்துள்ளது என காங்., நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். கடனில் இருந்த TN-ஐ வளர்ச்சியடைந்த மாநிலமாக திமுக மாற்றியதாக கனிமொழி கூறியிருந்தார். அதை X-ல் சுட்டிக்காட்டி, 2010-ல் உபி., தமிழகத்தை விட இருமடங்கு கடன் வைத்திருந்ததாகவும், ஆனால் தற்போது உபி.,-ஐ விட TN அதிக கடனில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என குறிப்பிட்டுள்ளார்.


