News April 8, 2025
எரிபொருள் தேவை 9.3% வரை அதிகரிப்பு!

மார்ச் மாதத்தில் நாட்டின் எரிபொருள் தேவை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முந்தைய மாதங்களை விட 9.3% வரை தேவை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல் தேவை 10.6% ஆகவும், டீசல் தேவை 10% ஆகவும் அதிகரித்து வருகிறது. சமையல் சிலிண்டர் விற்பனையும் 4.2% அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
தாக்குதலுக்கு 2 ஆண்டுகளாக தயாரான தீவிரவாதிகள்

<<18342042>>டெல்லி கார் குண்டுவெடிப்பில்<<>> முக்கிய குற்றவாளியான டாக்டர் முசாமில் ஷகீல், NIA விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்காக கடந்த 2 ஆண்டுகளாக தயாராகி வந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அம்மோனியம் நைட்ரேட் போன்ற குண்டு தயாரிக்கும் பொருள்கள் மற்றும் ரிமோட்களை வாங்கியதாகவும், இதற்காக ₹26 லட்சத்தை திரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
மனிதர்களை விட அதிக நாள்கள் வாழும் உயிரினங்கள்

சில விலங்குகளின் ஆயுள்காலம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆழ்கடல் உயிரினங்கள் முதல் ஆமைகள் வரை, மனிதர்களை விட அதிக ஆயுளைக் கொண்டுள்ளன. அவை, என்னென்ன விலங்குகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 22, 2025
ஆசிரியர்களை அரசு கைவிடாது: CM ஸ்டாலின்

டெட் தேர்வு குறித்து CM ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை செய்தார். ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற SC-யின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு, ஆசிரியர்களின் அச்சம் ஆகியவை குறித்து அவர் எடுத்துரைத்தார். அதற்கு, ஆசிரியர் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களை கைவிடாது என்றும் CM உறுதியளித்தார்.


