News April 8, 2025
எரிபொருள் தேவை 9.3% வரை அதிகரிப்பு!

மார்ச் மாதத்தில் நாட்டின் எரிபொருள் தேவை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முந்தைய மாதங்களை விட 9.3% வரை தேவை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல் தேவை 10.6% ஆகவும், டீசல் தேவை 10% ஆகவும் அதிகரித்து வருகிறது. சமையல் சிலிண்டர் விற்பனையும் 4.2% அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 17, 2025
எந்த கேரக்டரில் நடிக்கிறேன் என்பதே தெரியாது: VJS

‘அரசன்’ படத்தில் தன்னுடைய கேரக்டர் என்ன, எத்தனை நாள் ஷூட்டிங் என எதுவுமே தனக்கு தெரியாது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இந்த கேரக்டர் எழுதும்போது உங்க ஞாபகம் வருது சேது, எழுதட்டுமா என வெற்றிமாறன் சார் கேட்டார். உங்க ஞாபகத்தில் வருவதே நல்ல விஷயம், எழுதுங்க சார் என ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு எதுவுமே தெரியவில்லை என்றாலும், அனைத்தையும் வெற்றி சார் பார்த்துக்கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 17, 2025
அஜித்குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

சிவகங்கை, திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இவ்வழக்கில், A7 ஆக <<18544051>>DSP<<>> சண்முகசுந்தரம் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து, அவர் முன்ஜாமின் கோரி மதுரை HC அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இதன் மீதான விசாரணையின் போது, DSP சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரிக்கவுள்ளதாக CBI கூறியுள்ளது. இதனால், விரைவில் அவர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 17, 2025
IND vs SA: இன்று போட்டி நடக்குமா?

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4-வது டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. ஆனால், அங்கு அதீத பனிமூட்டம் இருப்பதால், போட்டி தொடங்குவது தாமதமாகி வருகிறது. 7:30 மணிக்கு மைதானத்தை ஆய்வு செய்த பிறகு, இன்றைய போட்டி நடக்குமா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இந்த போட்டி ரத்தானால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.


