News April 8, 2025
எரிபொருள் தேவை 9.3% வரை அதிகரிப்பு!

மார்ச் மாதத்தில் நாட்டின் எரிபொருள் தேவை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முந்தைய மாதங்களை விட 9.3% வரை தேவை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல் தேவை 10.6% ஆகவும், டீசல் தேவை 10% ஆகவும் அதிகரித்து வருகிறது. சமையல் சிலிண்டர் விற்பனையும் 4.2% அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
நாளை பள்ளிகள் விடுமுறையா? கலெக்டர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் 3 நாள்கள் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கலெக்டர்களுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. டெல்டா & தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. நேற்று இதேபோல் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. SHARE IT.
News November 24, 2025
உரிய நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம்: பிரேமலதா

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக முத்திரை பதிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுகவுடனான <<18372669>>கூட்டணி<<>> முறிந்து போனதாக கூறுவதில் உண்மையில்லை என தெரிவித்திருந்த அவர், உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். தேமுதிக இடம்பெறும் கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 24, 2025
இது நியாயமா கவுதம் கம்பீர்?

எவ்வித காரணமும் இன்றி வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் வரிசையை கம்பீர் மாற்றுவதாக ரசிகர்கள் சாடுகின்றனர். கடந்த 7 இன்னிங்ஸில் அவர் வெவ்வேறு வரிசையில் களமிறங்கியுள்ளார். கொல்கத்தா டெஸ்ட்டில் ஒன் டவுன் வீரராக இறங்கி சரியான டெக்னிக்குடன் சுழலை எதிர்கொண்ட சுந்தர், கவுஹாத்தி டெஸ்ட்டில் 8-வது வரிசையில் இறங்கினார். அடிக்கடி chop & change செய்வது வீரர்கள் மனதில் இன்செக்யூரிட்டியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


