News April 8, 2025

எரிபொருள் தேவை 9.3% வரை அதிகரிப்பு!

image

மார்ச் மாதத்தில் நாட்டின் எரிபொருள் தேவை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முந்தைய மாதங்களை விட 9.3% வரை தேவை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல் தேவை 10.6% ஆகவும், டீசல் தேவை 10% ஆகவும் அதிகரித்து வருகிறது. சமையல் சிலிண்டர் விற்பனையும் 4.2% அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 13, 2025

காங்கிரஸில் இருந்து விலகுகிறாரா சசி தரூர்?

image

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் MP-க்கள் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்தது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அண்மைக் காலமாக சோனியா, கார்கே ஆகியோரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் அவர், PM மோடி, மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் அதிகம் தலையை காட்டி வருகிறார். இதனால், அவர் கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் பாஜகவில் இணைவதற்கு அச்சாரமிடுவதாக பேச்சு எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

News December 13, 2025

இந்தியா மீதான டிரம்ப்பின் வரியை நீக்க தீர்மானம்

image

இந்திய பொருள்கள் மீது டிரம்ப் விதித்த 50% வரியை முடிவுக்கு கொண்டுவர, US பிரதிநிதிகள் சபையின் 3 உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த வரியை சட்டவிரோதமானது எனக்கூறிய டெபோரா ராஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி(இந்திய வம்சாவளி), இதனால் USA தொழிலாளர்கள், நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். வரியை நீக்கினால் இருநாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெறும் எனவும் கூறினர்.

News December 13, 2025

பொங்கல் பரிசு ₹3,000.. வெளியான முக்கிய தகவல்

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ₹3,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, நிதி ஆதாரங்களை திரட்ட அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளதாம். குறிப்பாக, அதிக லாபத்தில் இயங்கும் துறைகளிடம் கூடுதல் நிதி தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிச., கடைசி வாரத்தில் பொங்கல் பணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!