News April 8, 2025
எரிபொருள் தேவை 9.3% வரை அதிகரிப்பு!

மார்ச் மாதத்தில் நாட்டின் எரிபொருள் தேவை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முந்தைய மாதங்களை விட 9.3% வரை தேவை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல் தேவை 10.6% ஆகவும், டீசல் தேவை 10% ஆகவும் அதிகரித்து வருகிறது. சமையல் சிலிண்டர் விற்பனையும் 4.2% அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
அதிக நேரம் தூங்கும் விலங்குகள்

தூக்கம் என்பது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் உள்ள பொதுவான நடைமுறை. ஆனால், சில விலங்குகளுக்கு தூங்குவது மட்டும்தான் வேலை என்பது தெரியுமா உங்களுக்கு? அந்த விலங்குகள் நாளொன்றுக்கு எவ்வளவு மணி நேரம் தூங்கும் என்று தெரிந்தால், உங்களுக்கு தலையே சுற்றிவிடும். ஒருநாளில் அதிக நேரம் தூங்கும் விலங்குகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 23, 2025
ம.பி., கேரளாவில் 66.82 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

ம.பி.,யில் SIR பணிகளுக்கு பின் வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 42.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 31.25 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்துக்கு மாறியுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. இதேபோல் கேரளாவில் 24.08 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். SIR பணிகளுக்கு பிறகு இதுவரை TN-ல் அதிகபட்சமாக 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 23, 2025
சனி பெயர்ச்சி.. 5 ராசிகளுக்கு எச்சரிக்கை

2026-ல் சனி பகவானின் தாக்கத்தால், மேஷம், கும்பம், மீனம், சிம்மம், தனுசு ஆகிய ராசியினர், குடும்பத்தில் பதற்றம், மன அழுத்தம் என பல சவால்களை சந்திக்க கூடுமாம். இதற்கு பரிகாரமாக, சனிக்கிழமைகளில் கருப்பு எள், கருப்பு குடை, கடுகு எண்ணெய் உள்ளிட்டவற்றை தானம் செய்வது நல்லது. மேலும், சனி பகவானின் சன்னதியில் தீபம் ஏற்றுதல், ஆஞ்சநேயரை வழிபடுதல் ஆகியவை சிறந்த பரிகாரமாக அமையும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.


