News April 8, 2025

எரிபொருள் தேவை 9.3% வரை அதிகரிப்பு!

image

மார்ச் மாதத்தில் நாட்டின் எரிபொருள் தேவை கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிரடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முந்தைய மாதங்களை விட 9.3% வரை தேவை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது பெட்ரோல் தேவை 10.6% ஆகவும், டீசல் தேவை 10% ஆகவும் அதிகரித்து வருகிறது. சமையல் சிலிண்டர் விற்பனையும் 4.2% அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

உதயநிதி ஒரு வேங்கை மரம்: துரைமுருகன்

image

ஸ்டாலினுக்கு பிறகு கட்சியை உதயநிதி நடத்துவாரா என்பதில் பலருக்கு இருந்தது போல் தனக்கும் பயம் இருந்ததாக துரைமுருகன் கூறியுள்ளார். ஆனால் புலிக்கு பிறந்தது பூனைக்குட்டி அல்ல, அது ஒரு வேங்கை மரம், எளிதாக வெட்டி வீசிவிட முடியாது என உதயநிதி நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எல்லாவற்றையும் தாண்டி நிற்கும் திறமை, இளம் குருத்தான உதயநிதிக்கும் உள்ளதாக துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

கன்ஃபூசியஸ் பொன்மொழிகள்

image

*நல்லதை செய்ய ஆசைப்பட்டாலே போதும், உங்களுடைய தீய குணங்கள் எல்லாம் ஓடிவிடும்.
*உண்மையான அறிவு என்பது, நமக்கு தெரிந்ததை தெரியும் என்றும், தெரியாததை தெரியாது என்றும் ஏற்றுக்கொள்வதே.
*உங்களுக்கு எது விருப்பமில்லையோ, அதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்.
*ஏழையின் செல்வம் அவனது திறமைதான்.
*எல்லாமே அழகு தான், ஆனால் எல்லோர் கண்களும் அதை காண்பதில்லை.

News November 28, 2025

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: IMD

image

கடந்த 6 மணிநேரத்தில் 13 கிமீ வேகத்தில் ‘டிட்வா’ புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக IMD கூறியுள்ளது. இந்த புயல், நவ.30-ல் வடதமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரம் வழியாக வங்கக்கடல் பகுதியை கடக்கும் என்றும் IMD கணித்துள்ளது. எனவே, அதிகாலை 4 மணி வரை குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, புதுகை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். Stay safe

error: Content is protected !!