News March 30, 2025

நண்பன் மனைவியிடம் பழக்கம்.. RCB ரசிகர் கொலை

image

சென்னையில், CSK தோல்வியை கிண்டல் செய்த RCB ரசிகர் ஜீவரத்தினத்தை, சக நண்பர்களே அடித்துக் கொன்றதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில், பெண் விவகாரத்தில் நடந்த கொலை என தெரியவந்துள்ளது. நண்பன் அப்புவின் மனைவியிடம் ஜீவரத்தினம் பழகி வந்திருக்கிறார். இதை அறிந்த அப்பு, ஜீவரத்தினத்தை RCB வெற்றியை கொண்டாடுவதுபோல் வரவழைத்து நண்பர்கள் உதவியுடன் கொலை செய்துள்ளார்.

Similar News

News April 9, 2026

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் சோக முடிவு

image

ஆசை ஆசையாய் வளர்த்த மகள், திருமணமான ஒரே மாதத்தில் சடலமாகக் கிடந்தால் பெற்றோருக்கு எப்படி இருக்கும்? அப்படியொரு சோக சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. பிறந்த வீட்டிற்கு கணவருடன் விருந்துக்குச் சென்ற தேவிஸ்ரீ(19) ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகம். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News April 9, 2026

IPL டாஸ்: லக்னோ அணி பவுலிங்

image

ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் KKR -க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று LSG பவுலிங் தேர்வு செய்துள்ளது. கடந்த முறை KKR அணியில் இடம்பெறாத சுனில் நரைன் இந்த போட்டியில் களமிறங்க உள்ளார். ஆனால், வருண் சக்கரவர்த்தியின் காயம் குணமடையாததால் இந்த போட்டியிலும் அவர் விளையாடவில்லை. கடந்த முறை விளையாடிய அதே அணியுடன் LSG களம் காண்கிறது. காலை முதல் மழை பெய்து வருவதால் போட்டி தடைப்பட வாய்ப்புள்ளது.

News April 9, 2026

அதிமுக + விஜய் கூட்டணி.. பரபரப்பை கிளப்பினார்

image

அதிமுக, தவெக இடையேயான கூட்டணி பேச்சு தொடர்பாக செங்கோட்டையன் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். விஜய் ஆதரவுடன் CM-ஆகி ₹5,000 கோடி சம்பாதிக்கலாம் என EPS நினைத்தார். அதற்கு நான் தடையாக இருந்ததால் அவருக்கு என் மீது ஆத்திரம் என அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளை விட்டுக் கொடுத்ததற்கான பரிசுதான் துரோகி என்ற பட்டம் எனவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

error: Content is protected !!