News February 16, 2025

பாகிஸ்தானுடன் நட்புறவு தேவை: அண்ணாமலை

image

இந்தியா வல்லரசாக மாற அண்டை நாடுகளின் நட்புறவு அவசியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா தற்போது 5ஆவது இடத்தில் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் 2ஆவது இடத்திற்கு முன்னேற, பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளுடன் நட்புறவு பேண வேண்டியது மிகவும் அவசியமானது” எனத் தெரிவித்தார்.

Similar News

News August 23, 2025

திருமா – ராமதாஸ் சீக்ரெட் மீட்டிங்?

image

திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு விசிக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தைலாபுரத்திற்கே சென்று திருமா, ராமதாஸை சந்தித்ததாக தகவல்கள் கசிகின்றன. இச்சந்திப்பில் திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு தடை போடமாட்டேன் என திருமா சொன்னதாகவும், பாமகவை பிளவுபடுத்தும் பாஜகவின் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில், திருமா இதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

News August 23, 2025

இளமை திரும்புதே… பேட்ட வேலனுடன் மங்களம்!

image

ரஜினியை போயஸ் கார்டனில் அவரது வீட்டில் சந்தித்தார் சிம்ரன். இது குறித்து X-ல் பதிவிட்டுள்ள அவர், சில சந்திப்புகள் பொன்னானவை என்றும், சூப்பர் ஸ்டாருடன் நேரம் செலவிட்டது மிகுந்த மகிழ்ச்சி எனவும் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். ‘கூலி’, ‘டூரிஸ்ட் பேமிலி’ படங்களின் வெற்றி இந்த சந்திப்பை இனிமையாக்கி உள்ளதாகவும் அவர குறிப்பிட்டுள்ளார். பேட்ட ரஜினி, சிம்ரன் காம்போ யாருக்கெல்லாம் பிடிக்கும்?

News August 23, 2025

வாரத்தில் ஒருநாள் சோம்பேறியா இருங்க!

image

இன்றைய நவீன காலத்தில் எப்போது பார்த்தாலும் மன அழுத்தமாக இருக்கிறது என்று புலம்புபவர்கள் அதிகம். ஆனால், வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக சோம்பேறியாக இருந்தால் மன அழுத்தம் குறையுமாம். அதுமட்டுமல்லாமல், ரத்த அழுத்தம் சீராகி, மனநலம் மேம்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஓய்வு எடுப்பது நேரத்தை வீணடிப்பதல்ல; அது படைப்பாற்றலை அதிகரித்து, கவனத்தை கூர்மையாக்கி உழைப்புத் திறனையும் அதிகரிக்கிறதாம்.

error: Content is protected !!