News April 25, 2025

கோடீஸ்வர யோகம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு

image

ஒரு தாம்பாளத்தில் காகிதத்தை வைத்து, முக்கோணத்தை வரைந்து, மத்தியில் ‘ஓம் சக்தி’ என எழுதுங்கள். தாமரை பூவை வைத்து, உதிரி மல்லிகைப்பூ, ரோஜா கொண்டு ‘ஓம் சக்தி’ என சொல்லி தாமரை மீது போட வேண்டும். இவ்வாறு 108 முறை அர்ச்சனை செய்யுங்கள். பிறகு இவற்றை சிறிய துணியில் கட்டி, 3 நாட்கள் பூஜை அறையில் வைத்து, ஏதாவது ஒரு நீர்நிலையில் கொண்டு விட வேண்டும். பூவின் நறுமணம் வீட்டிற்கு செல்வத்தை அளிக்கும்.

Similar News

News November 6, 2025

ரொட்டி (பிஹார்) கருகிவிடும்: லாலு பிரசாத் யாதவ்

image

பிஹாரில் 20 ஆண்டு நிதிஷ் ஆட்சியை ரொட்டியுடன் லாலு பிரசாத் யாதவ் ஒப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ரொட்டியை திருப்பி போடவில்லை என்றால் கருகிவிடும். அதுபோல, 20 ஆண்டுகள் என்பது நீண்ட காலம், எனவே ஆட்சி மாற்றம் என்பது அவசியமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், புதிய பிஹாரை உருவாக்க இளைஞர்கள் (தேஜஸ்வி) கையில் ஆட்சி அதிகாரம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 6, 2025

₹2,708 கோடியை அள்ளி கொடுத்த ஷிவ் நாடார்

image

இந்தியாவில் நடப்பாண்டில் அதிக நன்கொடை வழங்கிய தொழிலதிபர்களின் பட்டியலை EdelGive Hurun வெளியிட்டுள்ளது. இதில், ₹2,708 கோடி நன்கொடை வழங்கி ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார். நாளொன்றுக்கு சராசரியாக ₹7.4 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். கல்வி, கலை, கலாசார துறைகளில் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளார். அவருக்கு அடுத்ததாக, முகேஷ் அம்பானி ₹626 கோடி, பஜாஜ் குடும்பம் ₹446 கோடி வழங்கியுள்ளனர்.

News November 6, 2025

பிஹாரில் வாக்குப்பதிவு நிறைவு

image

பிஹாரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, 60.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதிகபட்சமாக பெகுசராய் தொகுதியில் 67.32%, குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52.36% வாக்குகள் பதிவாகியுள்ளது.

error: Content is protected !!