News April 11, 2025
சகல சௌபாக்கியம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு!

வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் உள்ள தாயாருக்கு, அபிஷேகத்திற்குத் தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும் *பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட, செல்வம் பெருகும் *சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும் *மாலை வேளையில் சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர்சக்திகள் இருந்தால் விலகிவிடும்.
Similar News
News December 5, 2025
2026 தேர்தல்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு

2026 சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்சியாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நாதக அறிவித்துள்ளது. கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக், வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட உள்ளார். மேட்டூரில் வீரப்பனின் மகள் வித்யாராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீமான் போட்டியிடும் தொகுதி குறித்த விவரம் வெளியாகவில்லை. பிப்ரவரியில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
News December 5, 2025
டியூட் பாடல்களுக்கு ₹50 லட்சம் பெற்ற இளையராஜா

‘டியூட்’ படத்தில் இடம்பெற்ற தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த தடை கோரி <<18463776>>இளையராஜா<<>> வழக்கு தொடர்ந்தார். இதில் இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து, இளையராஜாவுக்கு உரிய இழப்பீடும், படத்தில் கிரெடிட்டும் வழங்கப்படும் என இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ₹50 லட்சத்தை இளையராஜா இழப்பீடாக பெற்றுள்ளார். இதனையடுத்து, அவர் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார்.
News December 5, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது அப்டேட்

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு பரிசுத் தொகை வழங்கவில்லை. ஆனால், 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு டபுள் ட்ரீட் காத்திருப்பதாக அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, டிச.12-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களின் வங்கி கணக்கில் ₹1,000 டெபாசிட் செய்யப்படவுள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


