News June 27, 2024
Truecaller வாடிக்கையாளர்களுக்கு இலவச ‘மோசடி காப்பீடு’

HDFC ERGO காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து, Truecaller செயலி ‘மோசடி காப்பீடு’ என்ற புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் இந்த காப்பீடு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் Truecaller செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ₹10,000 வரையிலான காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது.
Similar News
News December 5, 2025
ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெறவுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சிறப்பு தரிசன டிக்கெட்களுக்கான (₹300) முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் வெளியிடப்படும். டிக்கெட்களை பெற <
News December 5, 2025
பார்லிமென்ட்டை முடக்கிய தமிழக MP-க்கள்!

இன்று லோக்சபா தொடங்கியது முதலே <<18473828>>திமுக MP-க்கள்<<>> திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேச வேண்டுமென அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் பேசுவதற்கு அனுமதி மறுத்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ‘நீதி வேண்டும்’ என தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, ராஜ்யசபாவிலும் அமளியில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி MP-க்கள், வெளிநடப்பு செய்தனர்.
News December 5, 2025
ஜெயலலிதா நினைவிடத்தில் முடிவை அறிவித்தார் ஓபிஎஸ்

தனியாக கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என ஓபிஎஸ் தனது முடிவை அறிவித்துள்ளார். மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அவருடன் பேசவில்லை எனவும் தடாலடியாக கூறியுள்ளார். முன்னதாக வரும் 15-ம் தேதி தனிக்கட்சி குறித்த அறிவிப்பை OPS வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது.


