News October 4, 2025
இலவச சிலிண்டர் … ஹேப்பி நியூஸ்

‘PM உஜ்வாலா யோஜனா’ திட்டத்தில் ஏழை பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இது தவிர மானியமும் வழங்கப்படுகிறது. TN-ல் ஏற்கெனவே 40 லட்சம் பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. தற்போது இத்திட்டத்தில் 25 லட்சம் புதிய காஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில், 10%(2.50 லட்சம்) இணைப்புகள் நகரமயமாக்கல் அதிகமாக இருக்கும் தமிழகத்திற்கு ஒதுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 4, 2025
BREAKING: இபிஎஸ்க்கு அனுமதி மறுப்பு

நாளை திருச்செங்கோடு, குமாரபாளையத்திலும், நாளை மறுநாள் நாமக்கல், பரமத்திவேலூரிலும் ரோடு ஷோ செல்ல இபிஎஸ் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கரூர் துயர வழக்கில் நெடுஞ்சாலைகளில் பரப்புரை செய்ய அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவை சுட்டிக்காட்டி, இபிஎஸ் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து, பரப்புரை கூட்டத்துக்கான மாற்று இடத்தை தேர்வு செய்ய இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.
News October 4, 2025
இத கண்டிப்பா குழந்தைக்கு சொல்லி கொடுங்க!

குழந்தைகளை குறிவைத்து சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயங்களை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க *தெரியாதவர்களிடம் தகவல்களை பகிரக்கூடாது *தெரியாத வெப்சைட்டின் Link-களை கிளிக் செய்யக்கூடாது *ஆன்லைனில் நடைபெறும் பண குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பிள்ளைகளின் போனில் Parenting Control ஆப்ஷன் ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். SHARE IT.
News October 4, 2025
கடல் மாநாட்டுக்கு தயாரான சீமான்

ஆடு, மாடுகளின் மாநாட்டை நடத்தி முடித்த சீமான், அடுத்ததாக என்ன மாநாடு நடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அடுத்ததாக தருமபுரியில் மலைகளின் மாநாடு, தூத்துக்குடியில் கடல் மாநாடு மற்றும் தஞ்சையில் தண்ணீர் மாநாடு நடத்த உள்ளதாக சீமான் பதில் அளித்துள்ளார். மேலும் கடல் மாநாடு தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள கடலுக்கு படகு மூலம் சென்று ஆய்வு செய்தார்.