News April 22, 2025
மக்களுக்கு இலவச ‘ஏசி’ திட்டம்?

‘PM மோடி ஏசி யோஜனா’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அதில், நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருவதால், சுமார் 1.50 கோடி குடும்பங்களுக்கு இலவச ‘5 ஸ்டார் ஏசி’யை மே மாதம் முதல் மத்திய அரசு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, இது போன்ற தகவலை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளது.
Similar News
News April 22, 2025
தீவிரவாத தாக்குதல்… அமித் ஷாவிடம் ஆலோசித்த PM

சவுதி அரேபியா சென்றுள்ள PM மோடி <<16180559>>ஜம்மு காஷ்மீர் தாக்குதல்<<>> குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மக்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொல்லிய மோடி, அமித் ஷாவை நேரில் சென்று பார்வையிடவும் அறிவுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமடைந்தனர்.
News April 22, 2025
கவலைக்கிடமான நிலையில் உதவி கேட்கும் தமிழ் நடிகர்

புற்று நோயால் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வரும் நடிகர் சூப்பர் குட் <<16171338>>சுப்பிரமணி <<>>மீண்டும் உதவி கேட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று அவர் கோரிக்கை விடுத்த நிலையில், இதுவரை யாரும் உதவி செய்யவில்லை. இந்நிலையில், மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி & வீட்டு வாடகைக்கு பணம் இல்லை. வசதி படைத்த நடிகர்கள் & அரசு தனக்கு உதவ வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
News April 22, 2025
ஒரு வேலையும் செய்யாத நிறுவனத்திற்கு ₹1,000 கோடி!

தொடங்கி 2 மாதங்களே ஆன, எந்தவித செயல்பாடுகளும் இல்லாத URSA Clusters என்ற நிறுவனத்திற்கு, ஆந்திர அரசு ₹1,000 கோடி மதிப்புள்ள 59.6 ஏக்கர் நிலத்தை சொற்பமான தொகைக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ₹10 லட்சமாக இருக்கிறது. ஆனால், ₹5,728 கோடி முதலீடு செய்யும் என ஆந்திர அரசு எப்படி கூறுகிறது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.