News August 27, 2024

நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி மோசடி

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்கை உருவாக்கி உங்களின் தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் அல்லது அவசர நிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும் நட்பு கோரிக்கை விடுப்பார்கள். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ மற்றும் 1930 புகார் அளிக்களாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 13, 2026

நெல்லை : Phone – ல ரேஷன் கார்டு – APPLY..!

image

நெல்லை மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து செயலியை பதிவிறக்கம் செய்து ஆதார் எண் மட்டும் பதிவு பண்ணா போதும்.. உங்க ரேஷன் கார்டு காண்பிக்கும். அதை பதிவிறக்கம் செய்யுங்க. இதுல நீங்க என்னென்ன பொருள் வாங்கி இருக்கீங்கன்னு பாத்துக்கலாம். கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் பண்ணிக்கலாம். SHARE பண்ணுங்க..!

News January 13, 2026

நெல்லையில் ரயில் முன் பாய்ந்த பெண் – தற்கொலை?

image

நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த முருகன் மனைவி மாடத்தி (40) என்பவர், இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஜன.07ந் தேதி கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தார். விபத்தில் சிக்கினாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா எனச் சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 13, 2026

நெல்லை: தூக்கி செல்லப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்

image

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஒரு மாற்றுத்திறனாளி நியமன மாமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று சக்கர வாகனத்தில் வரும் அவர் மேல் தளத்தில் உள்ள மாமன்ற கூட்டத்தை அரங்கிற்கு செல்வதற்கு சரியான வசதிகள் இல்லாத நிலையில் ரெண்டு பேர் உதவியுடனே மேலே செல்லும் அவலம் உள்ளது.

error: Content is protected !!