News August 27, 2024

நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி மோசடி

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் நண்பரின் சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்கை உருவாக்கி உங்களின் தனிப்பட்ட தகவலை பெறுவதற்கும் அல்லது அவசர நிலையை காரணம் காட்டி பணம் கேட்கவும் நட்பு கோரிக்கை விடுப்பார்கள். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ மற்றும் 1930 புகார் அளிக்களாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 23, 2025

நெல்லை: ஆருத்ரா தரிசனம் கொடியேற்றம் அறிவிப்பு

image

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா ஆருத்ரா தரிசன நிகழ்ச்சிகளை முன்னிட்டு 25ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அதிகாலை ஐந்து மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். 26ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு பெரிய சபாபதி சன்னதி முன் மாணிக்கவாசகரை எழுந்தருள செய்து திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு நடன தீபாரதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 23, 2025

நெல்லை: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

image

நெல்லை மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க..

News December 23, 2025

நெல்லை: இருவருக்கு அரிவாள் வெட்டு – ஒருவர் பலி!

image

தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியில் மூக்கன் (52) – தங்ககணபதி (50) இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூக்கன் என்பவர் அரிவாளால் வெட்டினார். இதற்குப் பழிவாங்கிய தங்ககணபதியின் சகோதரர் முத்துக்குமரன் (46) மூக்கனை அரிவாளால் வெட்டினார். இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தங்ககணபதி குணமடைந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூக்கன் உயிரிழந்தார். இது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

error: Content is protected !!