News April 14, 2025

மோசடி மன்னன் மெகுல் சோக்சி அதிரடி கைது!

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹17,219 கோடி மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சியை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை நாடு கடத்துவதற்கான பணிகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. மோசடி செய்துவிட்டு நாடு நாடாக சுற்றித் திரிந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, கடந்த 2023 முதல் பெல்ஜியத்தில் வசித்து வருகிறார். இந்திய அரசின் பல கட்ட முயற்சிகளின் விளைவாக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News December 6, 2025

காஞ்சிபுரம் பெண்களே.. சொந்த காலில் நிக்கணுமா?

image

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 6, 2025

BREAKING: அதிமுகவில் இணைந்தார்

image

அமமுகவில் இருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் R.சுரேஷ், அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். முன்னதாக அமமுகவினர் அதிமுகவில் இணைந்து வருவது குறித்து பேசிய டிடிவி தினகரன், விசுவாசம் இல்லாதவர்கள் கட்சி மாறி வருவதாக சாடியிருந்தார்.

News December 6, 2025

இதுதான் அம்பேத்கரின் வெற்றி: CM ஸ்டாலின்

image

கல்வியால் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்க கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிப்பதாக கூறிய அவர், இதுதான் அம்பேத்கரின் வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது வாழ்க்கையே ஒரு பாடம் எனவும், அந்த பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

error: Content is protected !!