News June 22, 2024
தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகள்

தமிழ்நாட்டில் அடுத்த 20 நாள்களுக்குள் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என, சட்டப்பேரவையில் அமைச்சர் KN.நேரு அறிவித்துள்ளார். தற்போது 490 ஆக உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்படும் என்றும், 21 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நகராட்சிகளின் எண்ணிக்கையும் 139ல் இருந்து 159 ஆக உயர்த்தப்படும் என்றார்.
Similar News
News September 13, 2025
114 ரஃபேல் விமானங்களை வாங்க வலியுறுத்தல்

114 ‘Made in India’ ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சகத்திடம் IAF வலியுறுத்தியுள்ளது. ₹2 லட்சம் கோடி மதிப்பீட்டில் இந்த வர்த்தகம் நடைபெறும் என கருதப்படுகிறது. ஃபிரெஞ்ச் நிறுவனமான டசால்ட் மற்றும் இந்திய நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய போர் விமானங்களை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானங்களில் 60% பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.
News September 13, 2025
உங்கள் மூளையை மெல்ல கொல்லும் 6 பழக்கங்கள்

உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உறுப்பை சில மோசமான பழக்கவழக்கங்களால் நாம் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் மறதி, Brain Fog, தலைவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, உங்களது மூளையை கொல்லும் 6 மோசமான பழக்கங்கள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த தவறுகளை செய்பவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
News September 13, 2025
வெளிநாட்டு படங்கள் பார்த்தால் மரண தண்டனை

வடகொரியாவில் வெளிநாட்டு படங்களை பார்ப்பவர்களுக்கும், அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் நபர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. உலகில் எங்கும் இல்லாத வகையில், வடகொரியாவில் மக்கள் அதீதமாக கண்காணிக்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக இது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இருந்து தப்பிய 300 பேர் கூறியதின் அடிப்படையில் ஐநா இதை கூறியுள்ளது.